கிழக்குத் தாம்பரம் ரயில் கேட் மூடப்படும் நேரம் அது. ராஜேஷ் மேற்குத் தாம்பரத்திலிருந்து விரைவாக தனது மோட்டார் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தான். வெய்யில் பரம சூடாக இருந்தது. அணல் காற்று வேறு அடித்துக்கொண்டிருந்தது.
"எப்படியாவது சிக்னலைத் தாண்டிவிடவேண்டும்.. இல்லாட்டி ஆபீஸ் போய் சேரமுடியாது.. முருகா..காப்பாத்து..", என்று யோசித்துக்கொண்டு வண்டியை விர்ரென்று செலுத்தினான். சிக்னலை நெருங்கி விட்டான். இன்னும் பத்து வினாடிகள் போதும். ஆனால், அவன் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு. விதி. கேட் மெதுவாக மூடப்படுவதை கவனித்தான். வண்டி இன்னும் வேகமாக ஓடியது. ஒரு பேருந்து அவன் முன்னால் பட்டென்று பிரேக் அடித்து நின்றது.
"இனி ஒண்ணும் செய்யமுடியாது. பிரேக்கப் போடுடா முட்டாள்", அவன் வண்டி நின்றது. அடிக்கும் அணல்க்காற்றை விட அவன் மூச்சு சூடாகி விட்டது.
"என்ன கொடும சரவணா...புல் ஷிட்..", என்றபடியே வண்டியை அவன் இடதுபுறமிருந்த கரும்புச்சார் கடையை நோக்கி ஓரம்கட்டினான். கடை ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்தது. சற்று நிம்மதியாக இருந்தது ராஜேஷ்சுக்கு. கிங்க்ஸ் ஒன்றை கொளுத்தினான்.
"இந்த கொடும் வெயில்ல எப்படி தம் போட முடியுது தம்பி? கொஞ்சம் ஜூஸ் சாப்டுங்க", என்றார் கடைக்காரர்.
"இல்ல பாஸ். இப்போ எனக்கு இதான் துணை..வுடுங்க.. நானே கடுப்புல இருக்கேன்.."
"ஹீ ஹீ.. ரைட்டு..", என்றார் கடைக்காரர்.
வானத்தை நோக்கியபடி புஸ் புஸ் என்று புகையை ஊதினான். தன்னுடைய தோளை யாரோத் தொட்டார்கள். திடுக்கென்று திரும்பினான்.. ஒரு நிமிடம் ஆடிப்போனான்.. சிகரட் விரலை சுட்டது.. சிலைப்போல் நின்றவன் வெடுக்கென்று முடிந்த சிகரட்டை கீழே எறிந்தான்.. என்ன ஒரு சூடு...
"ஹாய்...ராஜேஷ்..", அவள் தீபிகா. ராஜேசுடைய கல்லூரி வாழ்க்கையின் ஒன் சைடு காதலி. கொச்சையாக சொல்லப்போனால், அவனுடைய சைட்டு. நம்பமுடியவில்லை அவனால்.
"ஹாய்.. தீபிகா? அதானே உன் பேர்?" [என்ன ஒரு நடிப்பு. அவளுக்கு தெரியாதா என்ன?]
"ஞாபகம் இருக்கா?" ஒரு சோகம் வழிகின்ற முகத்தில் எங்கேயோ, ஓரத்தில் ஒரு புன்முறுவல். அதைப்பார்க்கவில்லை ராஜேஷ். அவன் கண்ணுக்கு சோகம் தான் தெரிந்தது.
"என்ன திடீர்ன்னு? ஆச்சர்யமா இருக்கு உன்ன பாக்க. எப்டி இருக்க?"
அவன் சற்றும் எதிர்பாராத ஒன்று நடக்க ஆரம்பித்தது. தீபிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
"ஏன் அழற? எல்லாரும் பாக்கறாங்க. வா இப்டி", என்று அவளை கடையின் ஓரத்திற்கு அழைத்துச் சென்றான். இப்போது அவள் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.
"ஏய்... தீபிகா.." ["என் கண்ணே.. என்ன ஆச்சு என் செல்லமே.." என்றது ஒரு மனசாட்சி. "சீ.. சாடிஸ்ட் டா நீ" இன்னொரு மனசாட்சி சொன்னது]
"பிளீஸ்.. அழாமச்சொல்லு..", லேசாக தன் கையை அவள் தோள் மீது உரிமையோடு போட்டான். தீபிகா ஒன்றும் சொல்லவில்லை. ["முருகா..நீ தான் சாடிஸ்ட்"]
"நான் என்னோட வாழ்க்கைய வேஸ்ட் பண்ணிட்டேன். உன்ன காலேஜுல கண்டுக்கக்கூட இல்லை", என்றாள் தீபிகா. இவனுக்கு பேச்சு வரவில்லை.
"ஐ மீன்.. நீ என்ன காலேஜுல காதலிச்சது உண்மை தானே? சொல்லு ராஜேஷ்?"
"ஐ..ஐ..இப்போ எதுக்கு கேக்கற தீபிகா? மொதல்ல அழுகைய நிறுத்து. இந்தா, தொடச்சுக்கோ", அவள் தோளிலிருந்த கை தன் சட்டைப்பாக்கேட்டில் உள்ள கைக்குட்டையை நாடியது. ["இது தான் டா நீ மொதல்ல செஞ்சிருக்கணும்...ராஸ்கல்...சீப் பாஸ்டர்ட்.."]
அவள் துடைத்துக்கொண்டாள். டக்கென்று அவனைப்பார்த்து அபிநயமாக சிரித்தாள். ராஜேஷ் வேறு உலகத்தில் டூயட் பாட ஆரம்பித்துவிட்டான்.
"உன் கூட நெரிய பேசணும் ராஜேஷ். இப்போ பேசலேன்னா வேற எப்போவுமே பேச முடியாது.."
"தீபிகா.. எனக்கு ஒண்ணும் புரியமாட்டேன்குது.. இவ்ளோ நாள் எங்க இருந்த? என்ன ஆச்சு? காலேஜுல நான் சுத்தி சுத்தி வந்தப்போக்கூட நீ கண்டுகிட்டதே இல்லையே.. இப்போ எப்டி? நான் எத நம்பறது?"
"உன்ன பஸ்லேர்ந்துப் பாத்தேன். ரொம்ப வேகமா வண்டி ஓட்டாதே டா..", இவன் நெற்றியில் உள்ள வியர்வையை அதே கைக்குட்டையால் துடைத்தாள். ["என்ன சாமி நடக்குது இங்க?"]
"சரி.. சாயங்காலம் ஏழு மணிக்கு வசந்த பவன் மாடி AC ஹோட்டலுக்கு வந்துடு. நான் பேசணும். மனசு விட்டுப்பேசணும். நிச்சயம் வருவ தானே? இப்போ எனக்கு டைம் இல்லை. அதனாலத்தான் சொல்றேன்"
"அப் கோர்ஸ் தீபிகா.. நிச்சயம் வரேன்"
பச் என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து விரைவாக மறைந்துவிட்டாள். இவன் சிலைப்போல அவள் காணாமல் போகும்வரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"தம்பி, இப்போவாவது ஜூஸ் சாப்டுங்க. என்ன?"
"ஹ... செரி குடுங்க பாஸ்.. என்ன நடக்குதுன்னே தெரியல", இன்னொரு கிங்க்ஸ் சிகரட்டை கொளுத்தினான். கேட் துறந்து விட்டது. ஜூசும் வந்தது. மடக் மடக்கென்று ஜூசைக்குடித்துவிட்டு கடைக்காரருக்கு ஐம்பது ருபாய் நோட்டை நீட்டினான். மிச்சக்காசை வாங்குவதற்கு முன்பே சிட்டுப்போல வண்டியில் பறந்து விட்டான்.
"என்ன ஜன்மம் யா இவங்கெல்லாம்", என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.
கேட்டை தாண்டும் போது எதிரில் திலீப் வருவதைப்பார்த்தான். திலீப் அவன் பாலிய சிநேகிதன். ["நடந்ததை அவனிடம் சொல்லிவிட வேண்டும்"]
வண்டியை ஓரம் கட்டி.."டேய் திலீப்.. மொக்கை நாயே.."
"டே மச்சி.. எங்க டா நீ? ஆபீஸ் போல?", திலீப் சிரித்தான்.
"அது கடக்குது விடுடா. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் தம்பி. நம்பவே மாட்ட நீ"
திலீப் புருவத்தை உயர்த்தி "மறுபடியும் எதையோ புதுசா நம்பிருக்க நீ.. மேல சொல்லு.."
"தீபிகா ஞாபகம் இருக்கா? அதான் மச்சி.. அந்த கும் பிகர்.. நம்ம காலேஜ் தான் டா.. நம்ம ஜூனியர்.."
"ஒ.. அவளா.. நீ தான் கும் பிகர்ன்னு சொல்லிக்கணும். அட்டு பீஸ் அது"
"போடாங்கு.. மொக்கை போடாமக்கேளு..."
"என்னடா..மறுபடியும் லவ்வா அவ மேல? பீர் அடிச்சுகிட்டே பேசலாமா?"
"அது இன்னிக்கு ராத்திரி. பட்.. கேளு.. நான் கேட்டாண்ட தம் அடிசிகிட்டிருந்தேன் டா...அப்போ அவளே வந்து என்கூட பேசினா மச்சி.. அழ வேற ஆரம்பிச்சுட்டா.."
நடந்ததை சொன்னான் ராஜேஷ்.
"இப்போ சொல்லு மச்சி.. இது லவ் தானே? சூப்பர் லைப் மச்சி நாம வாழறது... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா.."
திலீப் கேட்டுக்கொண்டே இருந்தான்.
"அப்டியே என்னவோ ஒரு சூப்பர் பீலிங்கு மச்சி.. இன்னிக்கு நைட் பீர் அடிச்சே ஆகணும்.. miracles seldom happen மச்சி.."
"போதும் டா..போதும் டா.. இன்னிக்கு நைட்டு வா.. பீரோட பேசுவோம்.."
"சுவர் டா.. கால் பண்றேன் சாயங்காலம். இப்போதைக்கு பை"
"பாத்துப் போ தம்பி.. ஒண்ணு மட்டும் சொல்றேன்.. ஒன்ன யாரு வேணும்நாலும் சுலபமா ஏமாத்த முடியும் போலிருக்கு.. சீக்ரம் எல்லாரையும் நம்பிட்ற.. பாத்துக்கோ..."
"அதெல்லாம் இல்ல டா.. இன்னிக்கு நடந்தது நிஜம்.."
"சந்தோசம்.. anyway, சொல்றத சொல்லிட்டேன்..பஸ் வருது..மிஸ் பண்ண முடியாது.. பை டா.. சாயங்காலம் பாப்போம்...", ஓடி விட்டான் திலீப்..
ராஜேஷ் யோசிக்க ஆரம்பித்தான். திலீப் கடைசியாகச் சொன்னது அவனை சிந்திக்க வைத்தது. காலேஜில் இவனை கண்டுக்கக்கூடாத பெண் எப்படி அவ்வளவு வருடம் கழித்து இவனைக்கண்டு வழிய வேண்டும்?
"அப்டி ஒண்ணும் நான் மன்மதன் இல்லையே.. சம்திங் ராங்.. எல்லாம் ரைட்டா நடந்தால், நிச்சயமா ஏதோ ஒரு எடத்துல தப்பு இருக்கு.."
இன்னொரு சிகரட்டை வாயில் வைத்தான். தீக்குச்சியை பற்ற வைத்தான். நெருப்பு இருந்தது, அனால் சிகரட் பற்றவில்லை. மறுபடியும் முயற்சி செய்தான். விரலில் இருந்த தீக்குச்சி இல்லை. உலகம் இருள ஆரம்பித்தது. முழுதும் இருட்டு..
கண் விழித்தான்.. வலதுபுறமாக படுத்திருந்த அவன், தன் கண் முன்னால் ஒரு செத்துப்போன கரப்பன்பூசியைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்தான். அப்பூச்சி செத்துப்போச்சா என்று சோதித்தான்.
"சரி தான்.. கண்டது கனவு தானா? ஒ**, திலீப் அங்கயும் வந்து கெடுத்துடாண்டா.. anyway, இந்த லக்ஷ்மன்-ரேக்கா பூச்சி மருந்து நல்லாத்தான் வேல செய்யுது.."
கரப்பான்பூச்சியை அறையின் ஓரத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டு, "Fail, அவமானம் டா.. கனவுல கூட பிகர் மாட்ட மாட்டேங்குது. ஹ்ம்ம்.. விடு..அஹம் பிரம்மாஸ்மி.."
சிகரட்டை பற்றவைத்தான். இப்போது சிகரட் பற்றியது. புகை மண்டலம்.