இந்த சிறுகதையை புரிந்துக்கொள்ள, 'பொன்னியின் செல்வன்' படிக்காத என்
நண்பர்களுக்கு, பின்வரும் கதாப்பாதிரங்களின் அறிமுகம் மிக அவசியம்.
ரவிதாசன் & சோமன் சாம்பவன்: பாண்டிய நாட்டு சதிகாரர்கள்.
பழுவூர் ராணி நந்தினி தேவி: பெரிய பழுவேட்டரையரின் மனைவி. ஆதித்த கரிகாலனை பழிவாங்குவதர்க்காக சபதம் செய்திருப்பவள்.
ஆழ்வார்க்கடியான் / வைஷ்ணவன்: சோழ நாட்டின் முதலமைச்சர், அன்பில் அநிருத்தரின் அந்தரங்கத் தூதன்.
சுந்தரச்சோழர்: சோழநாட்டை ஆண்டுக்கொண்டிருக்கும் மன்னன்.
அருள்மொழிவர்மன்: சுந்தரச்சோழரின் இளம் புதல்வன், பிற்காலத்தில் ராஜ ராஜச் சோழன்
ஆதித்த கரிகாலன்: அருள்மொழிவர்மனின் அண்ணன்.
ஊமை ஸ்திரீ: மந்தாகினி - இவர் வரலாற்றைப் படிக்க, பொன்னியின் செல்வன் புத்தகத்தையே படிங்களேன், ப்ளீஸ்! இல்லையென்றால் சுவாரசியமாகவே இருக்காது!
இக்கதை ஒரு கற்பனை
ரவிதாசனும் சோமன் சாம்பவனும் அனுராதபுரத்தின் அருகில் இருந்த அடர்ந்தக்காட்டுப்பாதையில் விரைவாக
ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்தால் யாரோ துரத்துவது போல்
தெரிந்தது. ஆமாம், அவர்கள் அந்த ஈழக் காட்டில் முன்னும் பின்னும்
தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை துரத்திக்கொண்டு படை வீரர்கள்
மூவர், வேலும் வாள்களும் கைகளில் பிடித்தவாறு ஆரவாரம் செய்துக்கொண்டு
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
"அடே சோமா.. இந்த சோழ வீரர்கள் மிக கொடுமைக்காரர்கள்.. எவ்வளவு விரைவாக ஓடினாலும், பின்னே வந்துவிடுகிரார்களே?", என்றான் ரவிதாசன்.
"மந்திரவாதி.. அவர்கள் கொடூரமானவர்கள் தான்.. அனால், இப்போது நாம்
தப்பிக்கும் வழியை தேடுவோம்..அதோ, அந்த புதர் தெரிகிறதா? வாருங்கள் ஒளியலாம். இந்த முக்கில் திரும்பினால் அவர்களால் நம்மை பார்க்க இயலாது. சீக்கிரம்.. வாங்கள்..", என்றான்
சோமன்.
குறுகிய பாதை ஒரு பாறையின் தருவாயில் திரும்பியது. அதற்க்கு எதிர்மாறான
திசையில் ஒரு பெரும் புதர் காணப்பட்டது. அந்த்தக் காட்டில் நிறைய புதர்கள்
இருந்ததால், இது தனித்து விளங்கவில்லை. ஆகையால் ஒளிவதற்கு இது ஒரு நல்ல
இடம் என்றே நினைத்தான் சோமன்.
அனால் அதைக் கண்டவுடன் ரவிதாசனுக்கு சற்று பயம் உண்டாகிவிட்டது. இந்த
புதரில் என்ன கொடும் ஜீவ ராசிகள் ஒளிந்திருக்குமோ என்று நினைத்து ஒரு
நிமிடம் நடுங்கி நின்றான். இந்த திகைப்பை கவனித்த சோமன், ரவிதாசனை
இழுத்துக் கொண்டு புதரில் தள்ளினான். அதிசயமாக அந்தப் புதரில் முள் செடி
எதுவும் இல்லை.
"நல்ல யோகம், மெத்தை போலே இருக்கிறது அல்லவா?", என்றான் ரவிதாசன்.
"மந்திரவாதி, உம்!", என்று சோமன் தன் கையால் மந்திரவாதியின் வாயை மூடினான்.
சோமன் நினைத்தபடியே நடந்தது. வெறிகொண்ட சோழ வீரர்கள் இவர்கள் ஒளிந்திருந்த
புதரின் எதிர் திசையை நோக்கி ஓடி விட்டார்கள். சிறிது நேரத்தில் மறைந்தே
போனார்கள். இவ்வளவு அமைதியான காட்டை சோமன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. அனால், அந்த அமைதி நிலை நீடித்திருக்கவில்லை.
"சோமா.. நான் மந்திரவாதிதான்.. பாண்டிய நாட்டின் மிகச்சிறந்த மந்திரவாதி
தான்.. அனால், நீ பெரும் புத்திசாலி..எல்லா இடத்திலும் பச்சை பசேலென்று இருக்கும் இக்காட்டில் ஒளிவதர்க்கான
இடத்தை என்னால் தேட முடியவில்லையே? இவ்வளவு துல்லியமாக அபாயத்திலிருந்து
என்னைக் காப்பாற்றினாய்! நீ வாழ்க, உன் குலம் வாழ்க! பா..", என்று
மந்திரவாதி கூறுவதற்கு முன்னேயே சோமன் குறுக்கிட்டான்.
"மந்திரவாதி..உளறுவதை நிறுத்துங்கள்! ஆறு தினம் நாம் எதுவும் உண்ணவே இல்லையே?.. அந்த பிரம்மையினால் இப்படி பிதற்றுகிறீர்கள்..", என்றான் சோமன்.
"சரி தான்.. சோமா.. எனக்கு மிகவும் பசிக்கிறது.. நந்தினி தேவியின் சபதத்தை நிறைவேற்றவேண்டும் என்றால் நாம் உயிரோடு இருப்பது
மிக முக்கியம். எங்கேயாவது உணவு கிடைக்குமா என்று பார்ப்போம்".
இருவரும் மெதுவாக அப்புதரிலிருந்து வெளியே வந்தார்கள். சோமன் எல்லா திசையிலும்
பார்த்தான். சற்று தாங்கள் ஓடி வந்தப் பாதையிலிருந்து மேற்கு திசையை நோக்கி
நடந்தார்கள். எல்லாத்திசையிலும் மரங்களால் மூடப்பட்டு காட்சி அளித்த காடு,
இவர்கள் நடக்கையில் ஒரு குன்றை அடைந்தது. அங்கு மரங்கள் குறைவாக இருந்த
காரணத்தால், சூரிய பகவான் நன்றாகவே காட்சி அளித்தார்.
"அப்பப்பா.. மதுரை வெய்யில் தான் சூடு என்று நினைத்தேன்.. ஈழம் வெய்யில் தாங்க முடிய வில்லை.."
"மந்திரவாதி.. பசி... அதுதான் பிரச்சனை.. எல்லாம் மங்கித் தெரிகிறது..."
"உண்மை சோமா. குடிக்க இருந்த தண்ணீர் கூட தீர்ந்துவிட்டதே! கொடுமை"
"நீங்கள் இங்கு சற்று அமருங்கள்", என்று சோமன் மந்திரவாதிக்கு ஒரு சிறு புல்ப்புதரைக் காண்பித்தான். மந்திரவாதி உடனே அமர்ந்து தனது இரு கைகளையும்
தலை மீது வைத்துக்கொண்டு ஏதோ புலம்பிக்கொண்டிருந்தான். அப்புலம்பலை பொருட்படுத்தாமல் சோமன் இங்கும் அங்கும் எதாவது தெரிகிறதா என்று
பார்த்துக்கொண்டிருந்தான்.
"அங்கே பாருங்கள் மந்திரவாதி..ஒரு யானை வருகிறதே.."
"யானைப்பாகனும் தெரிகிறான்..புதரு தேடவேண்டும் போலிருக்கிறதே?"
"அதெல்லாம் வேண்டாம் ரவிதாசரே. அவன் ஒருவன் தான். நாம் இருவர். பகைவனாய் இருந்தால்
அழித்துவிடுவோம். அதற்கு பிறகு, யானையை பயன்படுத்திக்கொள்ளலாம். வேண்டும்
என்றால், இந்த யானையை வைத்தே அருள்மொழிவர்மனை கொன்று விடலாம்", என்று சோமன்
தன் கையில் சிறு கத்தியை மறைத்துக் கொண்டான்.
"அருள்மொழியார் யார்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ செய் சோமா", என்றான் மந்திரவாதி.
சோமன் இந்த உளறலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டான். யானை நெருங்கி
விட்டது. யானைப் பாகன் யானையின்
காதுக்கருகில் ஏதோ கூறினான். பத்தடிக்கப்பால் யானை நின்றது. அவன் கீழே இறங்கி கம்பீரமாக
நடந்து வந்தான். பல வருட உழைப்பினால் அவன் தேகம் மெருகேறியிருந்தது என்று தோன்றியது. சோமன்
எதற்கும் தயாராகத்தான் இருந்தான்.
கையில் தடியுடன், சடா முடியுடன், ஒரு சிறு புன்னகையுடன் அந்த யானைப்பாகன் வந்து நின்றான். ரவிதாசன் இப்போது
எழுந்து நிற்க முயற்சி செய்துக்கொண்டிருந்தான். அனால் அவனால் முடியவில்லை.
பரிதாபமான பார்வை யானைப்பாகனின் கம்பீரமான முகத்தில் தெரிந்தது.
அதை
கவனித்த சோமன், "யானைப் பாகா.. யார் அப்பனே நீ?"
"அய்யா, என் பெயர் ஈழத்தாள்வான். இங்கே அனுராதபுரம் ஆஸ்தான யானைப் பாகன் நான் தான். இவருக்கு என்ன ஆனது? உடம்பு சரியாக இல்லையா? "
"நாங்கள் உணவு உண்டு ஆறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தண்ணீர் கூட குடிப்பதற்கு இல்லை. இந்த ஈழக்காட்டில் பேய் மாதிரி அலைந்துக்கொண்டிருக்கிறோம்", என்று சோகமான தொனியில் சோமன் கூறினான்.
"என்னே கொடுமை..நீங்கள் யார் என்று அடியேன் தெரிந்து கொள்ளலாமா? சற்றுமுன் உங்களை சோழ சூழ்ச்சமர்கள் துரதினார்களா?"
"ஈழா.. அது எப்படி உனக்கு தெரிந்தது? நீ யார்?", என்று கூறும்போது, சோமன் தன் கையில் இருந்த கத்தியை ஈழன் முகம் முன்பு நீட்டினான்.
ஈழனின் முகத்தில் பயத்திற்கான அறிகுறி தெரிந்தது. "அவசரப்பட்டுவிட்டோமோ?" என்று கூட சோமன் எண்ணினான்.
"என்னை ஒன்றும் செய்யாதீர்கள் அய்யா. யானை மேல் உட்கார்ந்து இந்த காட்டில்
உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது தான் நீங்கள் ஓடுவதை கவனித்தேன்.
புதருக்குள் புகுந்ததையும் கவனித்தேன். இந்த சோழ படையினரால் உங்களுக்கு
ஆபத்து என்று வந்தேன்."
"ஆஹா, சோழர்களுக்கு இங்கும் ஒரு பகைவனா? நான் உன்னை எப்படி நம்புவது?"
"அய்யா. சுந்தரச்சோழரின் சீடர்கள் இங்கு செய்யும் அக்கிரம்களை
பார்க்கவில்லையா நீங்கள்? சரியா போச்சு போங்கள். எவ்வளவு புத்தர்சிலைகளை
தரைமட்டம் ஆக்க்யிருக்கிரார்கள்! மூடர்கள். தாங்கள் நம்பவில்லை என்றால் சென்று
வருகிறேன். என்னை விடுங்கள்."
"அடேயப்பா. என்ன துணிச்சல் அய்யா உனக்கு. நாங்கள் சோழ நாட்டு ஆட்களாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?", என்று கூறிக்கொண்டே ரவிதாசன் எப்படியோ எழுந்து நின்றான்.
"சாக்ஷாத் அருள்மொழிவர்மனே இங்கு வந்திருந்தால் இதைத் தான் சொல்லியிருப்பேன் ", என்றபோது சோமன் கத்தியை இறக்கி தனது இடுப்பில் பதுக்கிக்கொண்டான்.
ரவிதாசனும் சோமனும் சத்த்ம் போட்டு சிரித்தார்கள். ரவிதாசன் ஈழனின் தோள் மீது கையைப் போட்டான். தன்னால் நிற்க முடியவில்லை, அதனால் ஈழனின் உதவியை நாடினான். சற்று
ஆஜானுபாகுவாக தோற்றம் கொண்ட ரவிதாசன் யார் மீதாவது சாய்ந்தபடி நின்றால் உடல் பருமன் தாங்கமுடியாமல்
கீழே விழுந்து விடுவார்கள். அனால் ஈழனின் ஒரு சதைக் கூட நகன்றவாறு
தெரியவில்லை. கல் போன்றே நின்றான்.
"ஈழனே. நீ தான் உண்மையான வீரன். உன் கட்சியில் தான் நாங்கள் உள்ளோம்.
சுந்தரச்சோழரின் அக்கிரமங்களை கேள்வி கேட்கவே இங்கு அருள்மொழியாரை சந்திக்க
வந்துள்ளோம். எங்களை உதவுவாயா?"
"நல்ல கேள்வி கேட்டீர்கள் அய்யா. உதவாமல் வேறு என்ன என்னால் செய்ய முடியும்? உங்களுக்கு இப்போது உணவு தேவை. வாருங்கள் என்னுடன்."
மூவரும் கஜேந்திரனை அணுகினார்கள். தலைகுனிந்து இருந்த கஜேந்திரன் மீது
மூவரும் ஏரி அமர்ந்தார்கள். ஈழன் முன்பு போல் யானையிடம் ஏதோ கூறினான்.
கஜேந்திரன் விரைவாக நடந்தான்.
"ஈழா! மெதுவாகவே போ. சற்று பயமாக உள்ளது", என்றான் ரவிதாசன்.
"அய்யா. அருள்மொழியாரை சந்திக்க போகிறீர்கள் என்று சொல்லுகிறீர்கள், அனால் கஜேந்திரனை கண்டால் பயப்படுகிரீர்களே?"
"உனக்கு சற்று வாய் பேச்சு அதிகமாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு வைஷ்ணவன் உள்ளான் என்றால், இங்கு ஒரு ஈழத்தாள்வான். என்ன விந்தை! அவனைப்போல் நீயும் என்ன, சைவர்களுடன் சண்டை போடுவாயோ? ", என்று ரவிதாசன் கலீர் என்று சிரித்தான். மறுபடியும் சோமன் தன் தலையில் அடித்துக்கொண்டான். ஈழன் மௌனமாகவே இருந்தான்.
"என்ன அழகு வளம் மிகுந்த நாடு! உலகத்திலே மதுரை தான் சிறந்த இடம் என்று நினைத்தேன், அனால், ஈழம் வென்று விட்டது போல் தோன்றுகிறது", என்றான் ரவிதாசன்.
இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த ஈழன், "அய்யா, தாங்கள் பாண்டிய நாட்டவரா? மதுரையின் அழகைப்பற்றி சொல்லுங்களேன்?", என்றான்.
திடுக்கிட்ட சோமன், "இல்லை ஈழா, இந்த நேரத்தில் பாண்டிய நாடு என்றோ, சேர
நாடு என்றோ எது உள்ளது? எல்லாம் இந்த சுந்தரச்சோழர் ஆட்சி தானே? மதுரையின்
இயற்கையான அழகைப் பற்றி தான் மந்திரவாதி கூறுகிறார். நான் சொல்வது சரி தானே
அய்யா?", என்று சாந்தமாகவே பேசினான்.
"ஆம்..ஆம்.. சோமா..சரி தான்.. என்ன விந்தை..", என்றான் மந்திரவாதி. தனது
முட்டாள்தனத்தை நினைத்து தன்னையே திட்டிக்கொண்டான். இப்போது ஈழன் லேசாக
சிரித்ததை யாரும் கவனிக்கவில்லை.
கஜேந்திரன் குன்றைத்தாண்டினான். அப்போது, எங்கிருந்தோ மாயம் செய்ததுப்போல்
ஒரு மகா அருவி ஒன்று தெரிந்தது. ரவிதாசன் இதைக்கண்டு தெளிவு
அடைந்துவிட்டான். பல நாட்களாக தண்ணீர் குடிக்காமல், உணவு உண்ணாமல்
இருந்தவனுக்கு, இத்தண்ணீர் அற்புதத்தை, இயற்கையின் சீற்றத்தைப் பார்த்ததும்
பூரிப்பாகிவிட்டது. சோமனுக்கும் இதே நினைப்பு உண்டாகிவிட்டது. அவனும்
மனிதன் தானே பாவம்.
"அய்யா, அங்கு பாருங்கள். அந்த அருவி தெரிகிறதல்லவா? அங்கு தான் என் வீடு உள்ளது", என்றான் ஈழன்.
"என்னது, அருவி தான் வீடா? இப்போது யார் உளறுகிறார்கள் என்று சொல்லு சோமா?", என்று நகைத்தான் ரவிதாசன்.
"ஆமாம் அய்யா. அது தான் என் வீடு. குகை வீடு. கஜேந்திரா.. நில்லு இங்கே", என்று கர்ஜித்தான் ஈழன்.
மூவரும் கீழே இறங்கினார்கள். ஈழன், இருவரின் கையை பிடித்துக்கொண்டு பாறைகள்
மீது மெதுவாக அழைத்துச் சென்றான். சூரிய பகவான் சுட்டெரிக்கும் இடத்தில் குளிர்ந்த நீர் சாரல் பாறைகளை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. அந்தப் பாறைகள் மீது கால்கள் பட்டதும்
ரவிதாசனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.குகைவீட்டிர்க்குள் புகுந்தார்கள்.
அதிசயமான அந்த மகா அருவியின் நீர் வீழ்ச்சியின் வலதுபுரத்திர்க்கு ஈழன்
இவர்களை அழைத்துச் சென்றான். அங்கு ஒரு சிறு குகை தெரிந்தைக்கண்டு
ரவிதாசனும் சோமனும் மெச்சிப் போனார்கள். என்ன அழகாக இருந்தது அந்த குகை.
குகைக்குள் பிரவேசித்ததும் ஈழன் ஒரு புல் படுக்கையை விரித்தான். இருவரும்
அமர்ந்தார்கள். மிகவும் குளுமையாக இருந்தது அந்த குகை. குகை சுவற்றிலே
இருந்த சித்திரங்கள் மிக அழகாகவும் துல்லியமாகவும் செய்யப்பட்டதாகத் தெரிந்தது.
"பாண்டிய நாடு தோற்றது!", என்றே நினைத்தான் ரவிதாசன். இந்த முறை வெளியே சொல்லவில்லை!
"இங்கே இருங்கள் அய்யா. நான் போய் என் அன்னையிடம் உணவு வாங்கி வருகிறேன்"
"ஆகட்டும். சீக்கிரம் வா. பசிக்கிறது", என்றான் ரவிதாசன்.
சற்று உள்ளே சென்ற ஈழன் ஒரு முதுமைபிராட்டியிடம் கையால் செய்கைகள் செய்துக்கொண்டிருந்தான்.
"மந்திரவாதி. அதோ பாருங்கள். அந்த கிழவியை எங்கோ பார்த்த மாதிரி இல்லை?"
"அப்படி தோன்றவில்லை சோமா. முழுசாகவும் பார்க்க முடியவில்லை. அவர் பின்புறம் தானே தெரிகிறது? முழுசாக வந்து நின்னாலும் பசி மறைத்துவிடும் போலிருக்கிறது"
"இல்லை மந்திரவாதி. கண்டிப்பாக பார்த்திருக்கிறேன். இந்த சித்திரங்களைப் பாருங்கள். ஏதோ மர்மம் உள்ளது என்று என் உள் மனது கூறுகிறது"
அப்போது ஈழன் இரண்டு வாழை இலைகளுடன் வந்தான். இலைகளை கீழே வைத்து அதில் புளி சோற்றை கொட்டினான்.
"இந்தாங்கள் அய்யா. கொஞ்சம் புளி சோறு தான் உள்ளது. மன்னிக்கவும்"
வெறிகொண்ட புலி தன் இறையை தின்பது போல் ரவிதாசனும் சோமனும் புளி சோற்றை
புசிக்க ஆரம்பித்தார்கள். அவசரமாக சாப்பிட்டதால் சோமன் விக்கல் எடுக்க
ஆரம்பித்தான். இதை கவனித்த ஈழன் அங்கு உள்ள மண் பானையை அணுகி
தூக்கிப்பார்த்தான். அதில் தண்ணீர் ஒன்றும் இல்லை.
"தேன் நீர் முடிந்ததே! சற்று பொறுங்கள், கொண்டு வருகிறேன்", என்றான் ஈழன்.
"பொறு ஈழா. எங்கே போகிறாய்? இந்த அருவியில் இல்லாத தண்ணீரா?", என்றான் ரவிதாசன்.
"சரிதான் அய்யா. அருவியில் தண்ணீர் நிறைவாக உள்ளது சரிதான். ஆனால், அருவியின் உச்சியில் தான் தேன் நீர் உள்ளது. அதைக்குடித்தால் தான் விக்கல்
நிற்கும்", என்றான் ஈழன்.
"அது என்ன அப்பா தேன் நீர்? அதை விடு. சோமன் விக்கி சாகமாட்டான். சற்று
முன் உள்ளே உன் அன்னை இருக்கிறாள் என்று கூறினாயே, எங்கு போய்விட்டார்?
நாங்கள் பார்க்கக் கூடாதா?", என்றான் ரவிதாசன்.
"கண்டிப்பாக பார்க்கலாம் அய்யா. ஆனால், அவருக்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது"
"என்ன கொடுமை. அதனால் என்னப்பா? எங்கே போனார்கள்?"
"அய்யா அவருக்கு கூச்ச ஸ்வபாவம். அதனால் தான் பழங்களை பறிக்க சென்றுவிட்டார்"
"குகையின் பின்புறமாகவே வா?"
"ஆமாம். இந்த குகை அறையிலிருந்து காட்டிற்கு செல்லும் பாதை உள்ளது. அதன்
வழி தான் சென்றார். நான் அழைத்துச் செல்கிறேன். முதலில் உணவு உண்ணுங்கள்"
"அப்படியா. விடு அப்பறம் பார்த்துக்கொள்கிறேன்."
அப்போது ஈழன் உள்ளே சென்று இரண்டு துணி மூட்டைகளை எடுத்து வந்தான். எங்கேயோ செல்வதற்காக ஆயத்தமாக இருந்தான்.
"அய்யா. இதை அடுத்த முறை பசிக்கும் போது சாப்பிடுங்கள்"
"உன் உதவிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்? சோமா, அந்த தங்க மோதிரத்தை எடு", என்று ஒரு தங்க மோதிரத்தை ஈழநிடம் கொடுத்தான். சோமனுக்கு விக்கல் இன்னும் நிற்கவில்லை.
"ஆஹா. என்ன அழகான மோதிரம். இது என்ன பழுவூர் முத்திரையா?"
"மிக கெட்டிக்காரன் நீ. பழுவூர் முத்திரையே தான். எப்படி தெரிந்தது?"
"நந்தினி தேவி எனக்கு கடவுள். ஈழன் என்று அவரிடம் கூறிப்பாருங்கள். நன்கு அறிவார் என்னை"
"ஈழா. பழுவூர் ராணிக்கு உன்னை தெரியுமா? ஆஹா. என்ன நல்ல விஷயம்!"
"இப்போது தாங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்? வெய்யில் கொளுத்துகிறது. சற்று ஓய்வு எடுக்கவேண்டியது தானே? நானும் போய் தேன் நீர் நிரப்பிக்கொண்டு வருகிறேன்."
"நீ சொல்வதும் சரி. அருள்மொழியாரிடம் ஒரு மிக முக்கியமான சம்பாஷனை உள்ளது.
இன்று இரவே செய்தாக வேண்டும்."
"அப்படியா? அப்போது நீங்கள் நன்கு ஓய்வெடுக்க வேண்டும். நான் போய் தேன் நீர் கொண்டு
வருகிறேன். அது வரையில் தூங்குங்கள்."
"ஈழா. உன்னை பார்த்தால் மிகவும் வியப்பாக உள்ளது. அப்படியே ஆகட்டும். சென்று வா", என்றான் ரவிதாசன்.
ஈழன் குகை வாசலுக்குச் சென்றான். திரும்பிப்பார்த்து லேசாக சிரித்தான். இந்த முறை மந்திரவாதி அந்தச் சிரிப்பை கவனித்து விட்டான். ரவிதாசன் அவனை உற்றுப்பார்த்தான். அந்த காந்தக்கண்கள், சடாமுடி, நெரித்தப்புருவங்கள், வலிமையான தோள்கள், எங்கோ இவனைப்பார்த்த ஞாபகம் ரவிதாசனுக்கு வந்தது. ஏதோ மர்மம் இருக்கிறதென்ற நம்பிக்கை உறுதியானது. .
"ஈழனே.. நில். உன்னை எங்கேயோப் பார்த்தது போல் உள்ளதே? யார் நீ? "
லேசான சிரிப்பு கர்ஜனையாக மாறியது.
"ஏன் இப்படி சிரிக்கிறாய்?", என்றான் ரவிதாசன்.
"அய்யா, என்னை ஈழத்தாள்வான் என்று இங்குள்ள மக்கள் அன்பாக
கூப்பிடுகிறார்கள். எனக்கு இன்னொரு பெயரும் உள்ளது. சீக்கிரம் அதை
அறிவீர்கள்", என்று கூறியபடியே கஜேந்திரனிடம் விரைவாகச் சென்று
ஏறிக்கொண்டான்.
சோமன் விக்கலுடனே வெடுக்கென்று எழுந்து குகையின் வெளியே வந்தான். எவ்வளவு வேகமாக ஈழன் ஓடியிருக்கவேண்டும்? சோமன் குகையின் வாசலிற்கு
வருவதற்கு முன்னமே ஈழன் யானை மீது எரிக்கொண்டிருந்தான். இன்னும் ஒருமுறை
இவர்களைப் பார்த்துவிட்டு யானையின் காதில் ஏதோக் கூறினான். கஜேந்திரன்
மரணபயம் வந்ததுப்போல விரைந்து காட்டிற்குள் ஓடிவிட்டான். ஈழன் காட்டிற்குள் மறைந்தான்.
"மந்திரவாதி! நான் சந்தேகித்தது சரிதான். அங்கு பாருங்கள். பழுவூர் ராணியைப்போல் உருவம் கொண்ட ஸ்திரீ! அப்பா! என்ன விரைவாக ஓடுகிறாள்! ஈழனும் மறைந்து விட்டான். நாம் உண்ட உணவில் விஷம் இருக்கிறதா என்று பாருங்கள்..சீக்கிரம்.."
"சோமா! இல்லையே.. நல்ல சுவையாகத்தான் உள்ளது!! இவ்வளவு நேரம் நாம் பேசிக்கொண்டிருந்தது.....?"
"சந்தேகமே இல்லை. அருள்மொழிவர்மர் தான்"
ரவிதாசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பீதியின் காரணமாக புளி சோறு ரவிதாசனின் தொண்டையை அடைத்தது. அது நஞ்சினால் உண்டானது என்று பயந்துப் போனான்.
அதே நேரம் சோமன், "ஆனால் மந்திரவாதி, என் விக்கல் நின்றுவிட்டது!", என்று கூறி லேசாக சிரித்தான்.
அருள்மொழியார் நஞ்சு கொடுத்து பகைவர்களை கொல்லும் வீரர் கிடையாது என்பதை உணர சற்று நேரம் ஆனது.