ஞாயிறு, 4 மார்ச், 2012

ரிச் கெட் ரிச்சர்..புவர் கெட் புவரர்..

"டேய் ரங்கா... யார் கிட்டேந்து திருடலாம்?", ஒரு சிறிய அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரங்காவும் ராஜனும் எம்.சீ குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"இப்டி கேட்டா நான் என்ன சொல்றது டா? திருட நெனைக்க ஆரம்பிச்சுட்டோம், கஷ்ட காலம் மச்சி.."

"இதுல என்ன டா அவமானம். ஒலகத்துல யாரு திருடரதில்லை?"

"லாஜிக்ல அட்டாக் பண்ணிட்ட. மேல சொல்லு"

"நீ சீரியஸ் நா சொல்லு, நான் மேல பேசறேன்"

"சும்மா சொல்லு டா. ஒரு ரவுண்டு போடு, இந்தா", மடக் மடக்கென்று இரண்டு பேரும் அடித்தார்கள். அடித்தவுடன் பிளாஸ்டிக் பாக்கெட்டிலிருந்த ஊறுகாயை சுவைத்துக்கொண்டார்கள்.

"இதோ பாரு டா. நீயும் சரி, நானும் சரி, நல்லாதானே படிச்சோம்? கவர்மண்டு காலேஜ்ல பைசா குடுக்காம இஞ்சினீரிங் முடிச்சாச்சு. ஐ.டி கம்பனி கூட வேலை குடுத்தான். ரெண்டு பெரும் ஒர்ரே ஆபீஸ்ல தான் வேலை செஞ்சோம். என்ன மயித்த கண்டோம் அதுல?"

"ரைட்டு, ரைட்டு.. டன்சன் ஆவாதே டா. எமோஷன கட் பண்ணு"

இன்னொரு ரவுண்டு  உள்ளே போனது.

"ஆபீஸ் மொக்க இல்ல? வேலையாடா அது? ஏதோ ஒரு வெள்ளைக்காரனோட கடைல சிஸ்டம் வேலை செய்யலேன்னா, எஸ் சார், நோ சார், பக் பிக்ஸ் ரெடி சார்ன்னு மொக்க போடணும். அதுக்கு ஒரு மேனேஜர் வேற. ஒக்காளி. மேல என்ன நடக்குதுன்னே தெரியலை, வந்து ஆர்டர் போடுவான்"

"அதுனாலத் தானே வேலைய விட்டோம். அதாவது, பைசாக்குதான் மச்சி வால்யூ"

"கம்பனி பாலிடிக்ஸ் ஒரு பக்கம் டா. கூட வேல பாக்கறவங்க அலப்பறை தாங்க முடியல மச்சி. பேப்பர்ல இருக்கறத பாத்து பிரோக்ராம் தட்டரவனுக்கு எதுக்கு வெட்டி பந்தா? இதுல பொண்ணுங்க வேற. அவங்க வுடற சீன் தாங்க முடியல. ஏதோ அவங்கள சுத்தி தான் ஒலகமே ஓடுதுன்னு நெனப்பு வேற. நார்த் இந்தியால தான் இதெல்லாம் நடக்குதுன்னா, நம்ப ஊருலயும் இந்த கருமம்"

"டேய்..கற்றது தமிழ் டயலாக திருப்பி சொல்றயா? புதுசா சொல்லு டா"

இன்னொரு ரவுண்டு போனது.

"அணத்த விட்ரா. காசு அதிகமா இருந்தாலே ஒருத்தனையும் மதிகரதில்லை மச்சி. சாப்ட்வேர் வேலைய வுட்டுட்டு கட்டட வேலை செஞ்சோம். காசு கொஞ்சம் வந்தாலும் நம்மளால ஏதோ சந்தோசமா இருக்க முடியுது. நம்ம கூட வேலை பாக்கறவங்கள பாரு டா. என்ன பாத்ருகாங்க வாழ்க்கைல? அவங்க முன்னாடி சீன் வுட்டா அவங்க கடுப்பு ஆவாங்களா மாட்டாங்களா? அதான் திருடலாம்ன்னு சொல்றேன். இப்போ சொல்லு, யார் கிட்ட திருடலாம்?"

"ஹீ ஹீ.. மொதல்ல நாம இருக்கற சோசியல் டிவிஷனப்பத்தி சொல்லு பாப்போம்?"

"ஒ கே.. மொதல்ல சூப்பர் சொசைட்டி...பரம்பரை பணக்காரன்.. அவன லூசுல விடு.. புதுப் பணக்காரண புடி... நமக்குத் தெரிஞ்சே நூறு பேராவது இருப்பாங்க. அவங்கள தூக்குவோம் மச்சி"

"எப்டி தூகப்போறோம்? என்னத்த தூகப்போறோம்? நீ பைசா சுருட்டினாலும் இந்த மக்கள் வாங்கிப்பாங்களா?"

"கஷ்டம் தான். பட் என்ன பண்றது. கவர்மன்ட் செய்ய வேண்டிய வேலைய நம்ம செய்ய பாக்கறோம்"

"கவர்மன்ட் மேல இருந்த நம்பிக்கைலாம் எப்போவோ பறந்து போயாச்சு"

"செரியா சொன்ன. இன்னொரு ரவுண்டு ஊத்து"

"ஒன்னும் இல்ல ஊத்த. இந்தா, பீடி அடி", ரங்கா பீடியை கொளுத்தி ராஜனிடம் கொடுத்தான்.

"ரெண்டு பேறும் குடும்பங்கள எதித்துகிட்டு வெளில்ல வந்தாச்சு. அப்பன் மாமான்னு ஒரு உறவும் கடயாது. இத விட்டா வேற சான்ஸ் இல்லே டா. ரிஸ்க் எடுப்போமடா"

"ரிஸ்க்கு வந்து நமக்கு ரஸ்க்கு சாப்ட்ரா மாதிரி"

"பஞ்ச். தலைவர் பாபால்ல சொன்ன வசனம் தான் ஞாபகம் வருது டா. 'அப்பன் மாமா சித்தப்பா அத்தைன்னு உறவுல வேகரதோட, ரெண்டு கட்டு வெரகுல வெந்துட்டு போய்டலாம்'..என்ன டயலாக்!"

"ஒனக்கு ஏறிப் போச்சு ராஜா.. படுத்து தூங்கு, நாளைக்கு லோடு வந்துரும்"

"அது வரட்டும்டா...எவனா இருந்தாலும் வெட்டுவேன். நாளைக்கு பாரு.. சும்மா டக்குன்னு எழுந்திருப்பேன் பாரு"

"இந்த மாதிரி பஞ்ச் பேசியே நாசமா போறோம் டா நம்ம. ஒண்ணுத்தையும் மாத்த முடியாது நம்பளால"

"பாப்போமடா.."

"இல்லே இத சொல்லு நீ...யாருக்கூட நம்பள்ளுக்கு பிரச்சனையே இல்லேன்னு சொல்லு பாப்போம்? அவன் சம்பாதிக்கறான், அவன் ஏதோ சீன் விடறான். நம்ப எதுக்கு கண்டுக்கணும்? வுட்டு தள்ளு"

"டேய் ரங்கா, கடுப்பாகுது டா.."

"லூசுல விடு...நாளைக்கு பேசிக்கலாம்...இப்போ படு.."

ஒரு வழியாக இரண்டு பேரும் தூங்கி விட்டார்கள். காலையில் ராஜன் எழுந்தான், காலை ஆறு மணிக்கு. ரங்கன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். தலை வலித்துக்கொண்டிருந்தது. இரண்டு டம்பளர் தண்ணீரைக் குடித்தான். 

"டேய் ரங்கா..எந்திரி டா.. மாணிக்கம் அண்ணே வந்துடுவாரு..."

ரங்கன் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தான். 

"என்ன ராஜா...நேத்து பேசினது எதாவது ஞாபகம் இருக்கா?"

"அப் கோர்ஸ்.. நமக்கு தேவை பைசா தானே.. அது எங்க பொழங்கிட்டிருக்குன்னு எனக்கு தெரியும். பைசா கைல வந்தா நாம நல்லது செய்யலாம்"

"எங்கேர்ந்து டா பைசா வரும்? இருந்த நல்ல வேலையும் வுட்டாச்சு.. இப்போ செங்கல் தூக்கிற்றுக்கோம். என்னத்த செய்ய?"

"நீ பீல் பண்ணாதே.. இந்த மாசம் மிச்ச சம்பளத்த வாங்கி இன்டர்நெட் செனட்டர் போவோம் வா"

"என்ன டா சொல்ற?"

"வா டா.. பார்கிளேஸ் பாங்கு ரெண்டு ஐ டி ஆளுங்கள தேடறாங்களாம். எக்சல் ஷீட்டு எடிட் பண்ண மாசம் ஒரு லட்சம் தராங்களாம். HR ஆளு நம்ப மகேஷ் தான். வேலை கடச்சா மாதிரி தான்"

"சரி டா.. பட் பாங்க்ல வேலை செஞ்சு நல்லது எப்படி செய்றது?"

"முட்டாள்...Investment பாங்க்ல எல்லாமே திருட்டு பணம் தான் டா..சூதாடி சுழண்ட பணம்.. அதுலேர்ந்து திருடரதுல தப்பு இல்லையே? வா திருடலாம்"

"ரங்கநாதா...காப்பாத்து.."

ஐந்து வருடங்கள் கழித்து...

தொலைப்பேசி அடித்தது. ரங்கா அதை எடுத்தான்.  

"ஹல்லோ..ரங்கநாதன் ஹியர், ஹூ இஸ் திஸ்?"

"டேய் ரங்கா, நான் ராஜ் டா..ராஜா"

"ராஜா... எப்டி டா இருக்க? வேர் தி ஹெல் ஆர் யு?"

"Deutsche Bank சிங்காப்பூர். AVP. நீ சிங்கபூருல இருக்கேன்னு என் Barcap எக்ஸ் கலீக் சொன்னான், தீபன் டா"

"ஒ, எஸ் எஸ்.. பிசினெஸ் ட்ரிப்"

"சூப்பர். லெட் அஸ் மீட் டுடே ஈவேனிங் மான்.. ஐ காட் எ ஹியூஜ் போனஸ், யு நோ? ஒரு பென்ட்லி கார் வாங்கிட்டேன் மான்.."

"ஆஸம்..எவ்ளோ டா?"

"முப்பது மில்லியன் டா.."

"ரியல்லி? சூப்பர்.. ஹ ஹ ஹா..", ரங்கன் சிரித்தான்.

"ஏன் டா சிரிக்கற?"

"ஒன்னும் இல்ல, பழஸ்ஸ நெனச்சேன்..விடு.. சிட்டி ஹால் Brotzeit அட் 6 "

"சுவர்.. சி யு தேர்..பாய் டா.."

ரங்கன் என்கிற ரங்கநாத சேஷாத்ரி தொலைப்பேசியை கீழே வைத்தான். ஆறு மணிக்கு அவன் நெருங்கிய நண்பனான ராஜாமணி அய்யரை சந்திக்கப்போவதை நினைத்து சந்தோஷப்பட்டான். 

வியாழன், 1 மார்ச், 2012

மஞ்சளைத் தொடவேண்டும்

ஊரே கடற்க்கரையில் திரண்டி இருந்தது. ஆடைகளே இல்லாத ஆண்கள்,  பெண்டிர்  "ஓலா, ஊலா" என்று எதையோப் பாடிக்கொண்டிருந்தார்கள். திருவிழாப்போலக் காட்சி அளித்தது அந்த இடம். அப்போது மாலை. மாலை என்று தான் எண்ணிக்கொள்ளவேண்டும், ஏனென்றால், நேரம் என்ற கணக்கே அந்த மனிதர்களுக்குத் தெரியாதே.

அவர்கள் ஆதிவாசிகள்.

வெளிச்சம் நன்றாக இருந்த வேளையில் எல்லோரும் கூட்டம் கூடி எரிந்துக்கொண்டிருக்கும் தீப்பந்ததிர்க்கு முன்னால் அமர்ந்தார்கள். குடிசைப் போன்று காட்சி அளித்த வீட்டிலிருந்து ஆஜானுபாகுவாக காட்சி அளித்த ஒன்று நடந்து நெருப்பை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அது நெருங்கி வந்து விட்டது. இப்போதுப் பார்த்தால் தான் அது ஒரு அலி என்று தெரிகிறது.

ஒரு கூர்மையான வேல் போன்ற மர ஆயுதத்தை  இடது கையில் வைத்துக்கொண்டும், தலைமுடி கடற்க்கரை மணலை தடவிக்கொண்டும், மற்றொருக் கையில் ஒரு செத்தப்பாம்பினை எடுத்துக்கொண்டும் அக்கடர்க்கரை நகரின் தலைவரான அலிகள், அமர்ந்திருக்கும் மக்கள் முன் வந்து சேர்ந்தார். இப்போது அலைகள் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

"ஜந்துக்களே.. நீங்கள் தயாரா?"

"ஆ...ஆ..", மக்கள் அலறல்.

"அடங்கட்டும், அடங்கட்டும். காட்டிற்குள் ஓடிப்போய் பிடித்த மிகப்பெரிய உணவுப்பண்டம் இது", சர்ப்பத்தை மக்கள் முகத்திற்கு முன்னால் ஆட்டினார் அலிகள்.

"ஆ...ஆ..", மக்கள் பூரித்தார்கள். கிள்ளிய வயிற்ரை உடையவர்களின் முகத்தில் அவலமானப்பார்வைகள். 

"இந்த உணவுப்பண்டம் யாருக்காக என்று தெரியுமா? ஆ....ஆ....ஆ...", என்று அலறினார். 

அதேக்கூறையிலிருந்து உறுமல் போன்று ஒரு சத்தம் கேட்க்க, வெடுக்கென்று ஒரு புலி வெளியே வந்தது. அதன் மேல் அமர்ந்திருந்தான் வீரன். கட்டுமஸ்தான உடம்போடு, தன் தலைமுடியை சாட்டையாக பயன்படுத்தி அப்புலியை செலுத்திக்கொண்டு மக்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தான். புலியை மக்களிடமிருந்து கொஞ்ச தூரத்தில் நிறுத்தி விட்டு, தன் முடியை அதன் கழுத்தில் கட்டி ஒரு முடிச்சு போட்டுவிட்டு, அலிகளை நோக்கி நடந்தான். அவன் முடி நீண்டுக்கொண்டே இருந்தது. என்ன அற்புதம் என்று மக்கள் வியப்போடுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அலிகள் முன் வந்து நின்றான். கீழே விழுந்து அலிகளின் கால்களை நக்க ஆரம்பித்தான்.

"போதும் வீரா. எழுந்திரு"

"அலிகளே.  உங்கள் அழகே அழகு"

"அது எனக்குத் தெரியாதா? இந்தா, இதை இப்போதே தின்று விடு"

"மிகவும் புதுமையாக இருக்கிறதே. என்ன இது அலிகளே?", சர்ப்பத்தை நோக்கி வினவினான்.

"இது வழுக்கும் உணவுப்பண்டம். வாங்கிக்கொள்", வீரனிடம் கொடுத்தார்.

"ஆஹா.. உண்மையாகவே வழுக்குகிறது இதைப்பிடித்தால். இப்போதே தின்று விடுகிறேன்"

தலைப்புரத்தை வெட்டி புலிக்கு தூக்கி எறிந்தான். பிறகு மிச்சம் இருக்கும் பாம்பை கொறிக்க ஆரம்பித்தான். அவன் துப்பியதை மக்கள் அடித்துப் பிடித்து எடுத்தார்கள். பிறகு சுவைத்து உண்பதற்காக தலைமுடிகளுக்குள் மறைத்துக்கொண்டார்கள். ஒரு வழியாக வீரன் தின்று முடித்தான்.

"இனிமேல், உன்னுடைய கடைசி பணியை முடித்து விடு. அதற்குப்பின், புறப்படு, மஞ்சளை தொட்டு விட"

"என்ன பணி அலிகளே?"

அலிகள் கைகளை இரண்டு முறை தட்டினார். ஐந்து  பெண்டிர்  குடிசைக்குள்ளிருந்து ஓடி வந்து அலிகள் முன்னால் நின்றார்கள்.

"பெண்டிரே. வீரனுக்கு சக்திஊட்டுங்கள். உம். இப்போதே", அலிகள் கத்தினார்.

உடனே பெண்டீர் வீரனின் உடலில் தங்கள் வாய்களை பரவ விட்டார்கள். [மீதி நடந்ததை நான் கூறவேண்டியதில்லை] கடைசி காரியமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்போது அலிகள்,

"மக்களே. நான் முன்பு கூறியதுப் போல், இன்று ஒரு மகத்தான நாள். நம் வீரன் கடலுக்குப்பின் இருக்கும் மஞ்சளை தொட்டு வரப்போகிறான். தூரம் எவ்வளவு ஆனாலும் தொட்டு விடுவான். எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்காகத்தான் வீரனுக்கு இந்த உபசரணை எல்லாம். என்ன வீரனே, சந்தோஷமாக உள்ளதா?"

"மிகவும் சந்தோஷம். மஞ்சளை நிச்சய்ம் தொட்டு விடுகிறேன். எனக்கு கொட்டான் பைகள் வேண்டும், எல்லோருக்கும் மஞ்சளை எடுத்து வர."

"தேவையில்லை வீரனே. ஒரு கைப்பிடி கொண்டு வா, போதும். இப்பெண்டீர்களின் வயிற்றில் வாய்க்கும் பிள்ளைகளுக்கு பூசி விட. அவ்வளவு நேரம் ஆகாது என்று நினைக்கிறேன்"

"அப்படியே ஆகட்டும் அலிகளே. சென்று வருகிறேன்", என்றுக் கூறி தன் முடியால் புலியை இழுத்தான்.

புலி தூக்காதில் இருந்ததுப் போல, எழுந்திருக்கவே கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. எப்படியோ புலியை இழுத்து அதன் மேல் உட்கார்ந்து கடலை நோக்கி சென்றான். மக்கள் எல்லோரும் முன்போல பாட ஆரம்பித்தார்கள்.

"மஞ்சளே, இதோ வருகிறேன்", என்று கூறி, மக்களை ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு, புலியை செலுத்தினான். புலி நீந்த ஆரம்பித்தது. சிலைப்போல மக்கள் வீரனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெளிச்சம் குறையக்குறைய அவன் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலேப் போய்விட்டான்.

அமைதியான அந்த சூழ்நிலையில் அலிகள், "மக்களே, மஞ்சள் தூங்க சென்று விட்டது. சீக்கிரம் திரும்பி வரும். வீரன் நிச்சயம் தொட்டுவிடுவான். கவலைப்படாதீர்கள். உணவு உண்டு தூங்கக் செல்லுங்கள். யார் அங்கே! இன்று எனக்கு மூன்று பெண்களும், ஒரு ஆடவனும் நித்திரைப் பொழுதில் வேண்டும். அப்படியே குண்டு மீனைக் கொண்டுவந்து விடு. பசிக்கிறது", என்று கூறிய பிற்பாடு எல்லோரும் அந்த இடத்திலிருந்து விலகினார்கள்.

இருள் சூழ்ந்தது. மஞ்சள் மீண்டும் தோன்றியது. மக்கள் எல்லோரும் கடற்கரைக்கு ஓடினார்கள். வீரனைக் காணோம்.

அடுத்த மூன்று நாட்களும் இதே நடந்தது. அலிகள் பதற ஆரம்பித்தார்.

நான்காவது நாள், ஒரு ஆடவன் அலறியடித்துக்கொண்டு அலிகள் வசிக்கும் குடிசைக்குள் நுழைந்தான்.

"அலிகளே. புலி வந்துவிட்டது. புலி வந்து விட்டது"

"என்ன சொல்கிறாய். வீரன் எங்கே? மஞ்சள் எங்கே?"

"தெரியவில்லை அலிகளே. புலி தான் வந்திருக்கிறது. அனால் அது அசைய மாட்டேன்கிறது. செயலற்று இருக்கிறது, நம் கழுவாதையார்ப் போல"

"இதோ..எனக்கு பார்க்க வேண்டும்"

அலிகளும் அந்த ஆடவனும் ஓடினார்கள், கடற்கரைக்கு. மக்கள் திரண்டார்கள். அலிகள் படுத்திருந்தப் புலியைப்பார்த்தார். அருகே சென்றார். வாயிலிருந்து ஏதோ பச்சையாக வழிந்துக்கொண்டிருந்தது. என்ன வென்று அதன் வாயைத்திறந்தார். கையை உள்ளே விட்டு நோண்டினார். எதையோ கையில் எடுத்தார். வெளியே வந்தது சர்ப்பத்தின் தலை. என்ன ஆச்சர்யம் என்று அதை பக்கத்தில் இருக்கும் ஆடவனிடத்தில் கொடுத்தார்.

எழுந்து நின்று, "ஹ்ம்ம்.. ஒன்றும் வருத்தப்பட வேண்டாம். வீரன் தான் செய்தி அனுப்பியிருக்கான். மஞ்சளான இந்த புலி போல பல புலிகள் மஞ்சளில் இருக்கிறது என்றிருக்கிறான். அதற்க்கு உணவுப்பண்டங்கள் இல்லைப் போல. நல்ல செய்தி. என்ன செய்யலாம்?", யோசித்தார். தற்செயலாக, கீழேக்கிடந்த கட்டை ஒன்றை ஒரு சிறுவன் விட்டெறிந்தான்.  அந்த கட்டை மூழ்காமல் மிதக்க ஆரம்பித்தது. அலிகள் பக்கத்தில் இருக்கும் ஆடவனை நோக்கினார்.

"ஆஹா...தெரிந்தது. அதோப்பாருங்கள். மொட்டையா, காட்டிற்குள் போய் பல கட்டைகளை எடுத்துக்கொண்டு வா. நானும் மஞ்சளைத் தொட வேண்டும். அங்கிருக்கும் புலிகளுக்கு உணவுப்பண்டங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். வீரனே, நானும் வருகிறேன்", என்று கூறி உரக்க சிரித்தார்.

எல்லா மக்களும் ஆட ஆரம்பித்தார்கள். சில நாட்கள் கழித்து அலிகள் புறப்பட்டார். அதற்கடுத்த நாள், வீரன் கடற்கரைக்கு செயலற்று வந்து சேர்ந்தான்.