வியாழன், 1 மார்ச், 2012

மஞ்சளைத் தொடவேண்டும்

ஊரே கடற்க்கரையில் திரண்டி இருந்தது. ஆடைகளே இல்லாத ஆண்கள்,  பெண்டிர்  "ஓலா, ஊலா" என்று எதையோப் பாடிக்கொண்டிருந்தார்கள். திருவிழாப்போலக் காட்சி அளித்தது அந்த இடம். அப்போது மாலை. மாலை என்று தான் எண்ணிக்கொள்ளவேண்டும், ஏனென்றால், நேரம் என்ற கணக்கே அந்த மனிதர்களுக்குத் தெரியாதே.

அவர்கள் ஆதிவாசிகள்.

வெளிச்சம் நன்றாக இருந்த வேளையில் எல்லோரும் கூட்டம் கூடி எரிந்துக்கொண்டிருக்கும் தீப்பந்ததிர்க்கு முன்னால் அமர்ந்தார்கள். குடிசைப் போன்று காட்சி அளித்த வீட்டிலிருந்து ஆஜானுபாகுவாக காட்சி அளித்த ஒன்று நடந்து நெருப்பை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அது நெருங்கி வந்து விட்டது. இப்போதுப் பார்த்தால் தான் அது ஒரு அலி என்று தெரிகிறது.

ஒரு கூர்மையான வேல் போன்ற மர ஆயுதத்தை  இடது கையில் வைத்துக்கொண்டும், தலைமுடி கடற்க்கரை மணலை தடவிக்கொண்டும், மற்றொருக் கையில் ஒரு செத்தப்பாம்பினை எடுத்துக்கொண்டும் அக்கடர்க்கரை நகரின் தலைவரான அலிகள், அமர்ந்திருக்கும் மக்கள் முன் வந்து சேர்ந்தார். இப்போது அலைகள் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

"ஜந்துக்களே.. நீங்கள் தயாரா?"

"ஆ...ஆ..", மக்கள் அலறல்.

"அடங்கட்டும், அடங்கட்டும். காட்டிற்குள் ஓடிப்போய் பிடித்த மிகப்பெரிய உணவுப்பண்டம் இது", சர்ப்பத்தை மக்கள் முகத்திற்கு முன்னால் ஆட்டினார் அலிகள்.

"ஆ...ஆ..", மக்கள் பூரித்தார்கள். கிள்ளிய வயிற்ரை உடையவர்களின் முகத்தில் அவலமானப்பார்வைகள். 

"இந்த உணவுப்பண்டம் யாருக்காக என்று தெரியுமா? ஆ....ஆ....ஆ...", என்று அலறினார். 

அதேக்கூறையிலிருந்து உறுமல் போன்று ஒரு சத்தம் கேட்க்க, வெடுக்கென்று ஒரு புலி வெளியே வந்தது. அதன் மேல் அமர்ந்திருந்தான் வீரன். கட்டுமஸ்தான உடம்போடு, தன் தலைமுடியை சாட்டையாக பயன்படுத்தி அப்புலியை செலுத்திக்கொண்டு மக்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தான். புலியை மக்களிடமிருந்து கொஞ்ச தூரத்தில் நிறுத்தி விட்டு, தன் முடியை அதன் கழுத்தில் கட்டி ஒரு முடிச்சு போட்டுவிட்டு, அலிகளை நோக்கி நடந்தான். அவன் முடி நீண்டுக்கொண்டே இருந்தது. என்ன அற்புதம் என்று மக்கள் வியப்போடுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அலிகள் முன் வந்து நின்றான். கீழே விழுந்து அலிகளின் கால்களை நக்க ஆரம்பித்தான்.

"போதும் வீரா. எழுந்திரு"

"அலிகளே.  உங்கள் அழகே அழகு"

"அது எனக்குத் தெரியாதா? இந்தா, இதை இப்போதே தின்று விடு"

"மிகவும் புதுமையாக இருக்கிறதே. என்ன இது அலிகளே?", சர்ப்பத்தை நோக்கி வினவினான்.

"இது வழுக்கும் உணவுப்பண்டம். வாங்கிக்கொள்", வீரனிடம் கொடுத்தார்.

"ஆஹா.. உண்மையாகவே வழுக்குகிறது இதைப்பிடித்தால். இப்போதே தின்று விடுகிறேன்"

தலைப்புரத்தை வெட்டி புலிக்கு தூக்கி எறிந்தான். பிறகு மிச்சம் இருக்கும் பாம்பை கொறிக்க ஆரம்பித்தான். அவன் துப்பியதை மக்கள் அடித்துப் பிடித்து எடுத்தார்கள். பிறகு சுவைத்து உண்பதற்காக தலைமுடிகளுக்குள் மறைத்துக்கொண்டார்கள். ஒரு வழியாக வீரன் தின்று முடித்தான்.

"இனிமேல், உன்னுடைய கடைசி பணியை முடித்து விடு. அதற்குப்பின், புறப்படு, மஞ்சளை தொட்டு விட"

"என்ன பணி அலிகளே?"

அலிகள் கைகளை இரண்டு முறை தட்டினார். ஐந்து  பெண்டிர்  குடிசைக்குள்ளிருந்து ஓடி வந்து அலிகள் முன்னால் நின்றார்கள்.

"பெண்டிரே. வீரனுக்கு சக்திஊட்டுங்கள். உம். இப்போதே", அலிகள் கத்தினார்.

உடனே பெண்டீர் வீரனின் உடலில் தங்கள் வாய்களை பரவ விட்டார்கள். [மீதி நடந்ததை நான் கூறவேண்டியதில்லை] கடைசி காரியமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்போது அலிகள்,

"மக்களே. நான் முன்பு கூறியதுப் போல், இன்று ஒரு மகத்தான நாள். நம் வீரன் கடலுக்குப்பின் இருக்கும் மஞ்சளை தொட்டு வரப்போகிறான். தூரம் எவ்வளவு ஆனாலும் தொட்டு விடுவான். எனக்கு நம்பிக்கை உள்ளது. அதற்காகத்தான் வீரனுக்கு இந்த உபசரணை எல்லாம். என்ன வீரனே, சந்தோஷமாக உள்ளதா?"

"மிகவும் சந்தோஷம். மஞ்சளை நிச்சய்ம் தொட்டு விடுகிறேன். எனக்கு கொட்டான் பைகள் வேண்டும், எல்லோருக்கும் மஞ்சளை எடுத்து வர."

"தேவையில்லை வீரனே. ஒரு கைப்பிடி கொண்டு வா, போதும். இப்பெண்டீர்களின் வயிற்றில் வாய்க்கும் பிள்ளைகளுக்கு பூசி விட. அவ்வளவு நேரம் ஆகாது என்று நினைக்கிறேன்"

"அப்படியே ஆகட்டும் அலிகளே. சென்று வருகிறேன்", என்றுக் கூறி தன் முடியால் புலியை இழுத்தான்.

புலி தூக்காதில் இருந்ததுப் போல, எழுந்திருக்கவே கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. எப்படியோ புலியை இழுத்து அதன் மேல் உட்கார்ந்து கடலை நோக்கி சென்றான். மக்கள் எல்லோரும் முன்போல பாட ஆரம்பித்தார்கள்.

"மஞ்சளே, இதோ வருகிறேன்", என்று கூறி, மக்களை ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டு, புலியை செலுத்தினான். புலி நீந்த ஆரம்பித்தது. சிலைப்போல மக்கள் வீரனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெளிச்சம் குறையக்குறைய அவன் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமலேப் போய்விட்டான்.

அமைதியான அந்த சூழ்நிலையில் அலிகள், "மக்களே, மஞ்சள் தூங்க சென்று விட்டது. சீக்கிரம் திரும்பி வரும். வீரன் நிச்சயம் தொட்டுவிடுவான். கவலைப்படாதீர்கள். உணவு உண்டு தூங்கக் செல்லுங்கள். யார் அங்கே! இன்று எனக்கு மூன்று பெண்களும், ஒரு ஆடவனும் நித்திரைப் பொழுதில் வேண்டும். அப்படியே குண்டு மீனைக் கொண்டுவந்து விடு. பசிக்கிறது", என்று கூறிய பிற்பாடு எல்லோரும் அந்த இடத்திலிருந்து விலகினார்கள்.

இருள் சூழ்ந்தது. மஞ்சள் மீண்டும் தோன்றியது. மக்கள் எல்லோரும் கடற்கரைக்கு ஓடினார்கள். வீரனைக் காணோம்.

அடுத்த மூன்று நாட்களும் இதே நடந்தது. அலிகள் பதற ஆரம்பித்தார்.

நான்காவது நாள், ஒரு ஆடவன் அலறியடித்துக்கொண்டு அலிகள் வசிக்கும் குடிசைக்குள் நுழைந்தான்.

"அலிகளே. புலி வந்துவிட்டது. புலி வந்து விட்டது"

"என்ன சொல்கிறாய். வீரன் எங்கே? மஞ்சள் எங்கே?"

"தெரியவில்லை அலிகளே. புலி தான் வந்திருக்கிறது. அனால் அது அசைய மாட்டேன்கிறது. செயலற்று இருக்கிறது, நம் கழுவாதையார்ப் போல"

"இதோ..எனக்கு பார்க்க வேண்டும்"

அலிகளும் அந்த ஆடவனும் ஓடினார்கள், கடற்கரைக்கு. மக்கள் திரண்டார்கள். அலிகள் படுத்திருந்தப் புலியைப்பார்த்தார். அருகே சென்றார். வாயிலிருந்து ஏதோ பச்சையாக வழிந்துக்கொண்டிருந்தது. என்ன வென்று அதன் வாயைத்திறந்தார். கையை உள்ளே விட்டு நோண்டினார். எதையோ கையில் எடுத்தார். வெளியே வந்தது சர்ப்பத்தின் தலை. என்ன ஆச்சர்யம் என்று அதை பக்கத்தில் இருக்கும் ஆடவனிடத்தில் கொடுத்தார்.

எழுந்து நின்று, "ஹ்ம்ம்.. ஒன்றும் வருத்தப்பட வேண்டாம். வீரன் தான் செய்தி அனுப்பியிருக்கான். மஞ்சளான இந்த புலி போல பல புலிகள் மஞ்சளில் இருக்கிறது என்றிருக்கிறான். அதற்க்கு உணவுப்பண்டங்கள் இல்லைப் போல. நல்ல செய்தி. என்ன செய்யலாம்?", யோசித்தார். தற்செயலாக, கீழேக்கிடந்த கட்டை ஒன்றை ஒரு சிறுவன் விட்டெறிந்தான்.  அந்த கட்டை மூழ்காமல் மிதக்க ஆரம்பித்தது. அலிகள் பக்கத்தில் இருக்கும் ஆடவனை நோக்கினார்.

"ஆஹா...தெரிந்தது. அதோப்பாருங்கள். மொட்டையா, காட்டிற்குள் போய் பல கட்டைகளை எடுத்துக்கொண்டு வா. நானும் மஞ்சளைத் தொட வேண்டும். அங்கிருக்கும் புலிகளுக்கு உணவுப்பண்டங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். வீரனே, நானும் வருகிறேன்", என்று கூறி உரக்க சிரித்தார்.

எல்லா மக்களும் ஆட ஆரம்பித்தார்கள். சில நாட்கள் கழித்து அலிகள் புறப்பட்டார். அதற்கடுத்த நாள், வீரன் கடற்கரைக்கு செயலற்று வந்து சேர்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக