திங்கள், 27 ஜனவரி, 2014

மாயை மாயையே..

கண்ணில் தோன்றியது..
நெஞ்சில் நின்றது..
மாற்றவும் முடியாது..

மாயை மாயையே..

கர்ம நன்மைகள் செய்தாலும்..
மரணவாசிகளை மீட்டாலும்..
நன்மைக்கு நன்மை செய்தாலும்..

மாயை மாயையே..

துயரத்தில் நனைந்தாலும்..
அவள்முகம் மறப்பதில்லை..
மரணமே மறந்துவிடும்..

மாயை மாயையே..

தகுதியற்றவன் நான்..
தகுதியற்றவன் நீ..
தகுதியற்றவன் அவன்..
தகுதியற்றவளும் அவள்...

மாயை மாயையே..


திங்கள், 20 ஜனவரி, 2014

இந்த ஒரு நிமிடம்..

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

எத்தனை இன்பங்கள்..
எத்தனை ஆசைகள்..
எத்தனை வேதனைகள்..
ஏன் மனிதன் சிந்திப்பதில்லை..
கல்வி கொடுக்கபட்டிருக்கிறது ..
நல்ல சூழ்நிலை இருக்கிறது..
ஆனாலும் சுயநலத்தின் ஆட்சி..
யார் தடுப்பது?

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

அடுத்த நிமிடம் வந்துவிட்டால்,
என்ன வரும் யாரறிவார்..
என் வீடு என் நாடு என் மக்கள் என் மொழி
நினைத்து வாழ்தல் செழிப்போ, அறியாமையோ?
அறியாதவை எண்ணத்தக்கதல்ல..
அறிந்தவை, மறந்துவிடும்..
இந்த நிமிடம் போதாதா?

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

நிழலில் குளிர்ச்சி ஏன்?
சாரலில் மகிழ்ச்சி ஏன்?
மரணத்தில் நெகிழ்ச்சி ஏன்?
பாசத்தில் கண்ணீர் ஏன்?
சாதனையில் பெருமை ஏன்?
சாவதில் பயமும் தான் ஏன்?

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..

கவலைகள் மறந்துவிடும்..
நினைவுகள் மறந்துவிடும்..
பந்தங்கள் மறைந்துவிடும்..
கனவுகளும் கலைந்துவிடும்..
மயிருகளும் நரைத்துவிடும்..
உதவிகளும் மறந்துவிடும்..
சக்தியற்ற மதமடா மனிதன்..

இந்த ஒரு நிமிடம்..
இந்த ஒரு நிமிடம்..