ஞாயிறு, 4 மார்ச், 2012

ரிச் கெட் ரிச்சர்..புவர் கெட் புவரர்..

"டேய் ரங்கா... யார் கிட்டேந்து திருடலாம்?", ஒரு சிறிய அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ரங்காவும் ராஜனும் எம்.சீ குவாட்டர் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"இப்டி கேட்டா நான் என்ன சொல்றது டா? திருட நெனைக்க ஆரம்பிச்சுட்டோம், கஷ்ட காலம் மச்சி.."

"இதுல என்ன டா அவமானம். ஒலகத்துல யாரு திருடரதில்லை?"

"லாஜிக்ல அட்டாக் பண்ணிட்ட. மேல சொல்லு"

"நீ சீரியஸ் நா சொல்லு, நான் மேல பேசறேன்"

"சும்மா சொல்லு டா. ஒரு ரவுண்டு போடு, இந்தா", மடக் மடக்கென்று இரண்டு பேரும் அடித்தார்கள். அடித்தவுடன் பிளாஸ்டிக் பாக்கெட்டிலிருந்த ஊறுகாயை சுவைத்துக்கொண்டார்கள்.

"இதோ பாரு டா. நீயும் சரி, நானும் சரி, நல்லாதானே படிச்சோம்? கவர்மண்டு காலேஜ்ல பைசா குடுக்காம இஞ்சினீரிங் முடிச்சாச்சு. ஐ.டி கம்பனி கூட வேலை குடுத்தான். ரெண்டு பெரும் ஒர்ரே ஆபீஸ்ல தான் வேலை செஞ்சோம். என்ன மயித்த கண்டோம் அதுல?"

"ரைட்டு, ரைட்டு.. டன்சன் ஆவாதே டா. எமோஷன கட் பண்ணு"

இன்னொரு ரவுண்டு  உள்ளே போனது.

"ஆபீஸ் மொக்க இல்ல? வேலையாடா அது? ஏதோ ஒரு வெள்ளைக்காரனோட கடைல சிஸ்டம் வேலை செய்யலேன்னா, எஸ் சார், நோ சார், பக் பிக்ஸ் ரெடி சார்ன்னு மொக்க போடணும். அதுக்கு ஒரு மேனேஜர் வேற. ஒக்காளி. மேல என்ன நடக்குதுன்னே தெரியலை, வந்து ஆர்டர் போடுவான்"

"அதுனாலத் தானே வேலைய விட்டோம். அதாவது, பைசாக்குதான் மச்சி வால்யூ"

"கம்பனி பாலிடிக்ஸ் ஒரு பக்கம் டா. கூட வேல பாக்கறவங்க அலப்பறை தாங்க முடியல மச்சி. பேப்பர்ல இருக்கறத பாத்து பிரோக்ராம் தட்டரவனுக்கு எதுக்கு வெட்டி பந்தா? இதுல பொண்ணுங்க வேற. அவங்க வுடற சீன் தாங்க முடியல. ஏதோ அவங்கள சுத்தி தான் ஒலகமே ஓடுதுன்னு நெனப்பு வேற. நார்த் இந்தியால தான் இதெல்லாம் நடக்குதுன்னா, நம்ப ஊருலயும் இந்த கருமம்"

"டேய்..கற்றது தமிழ் டயலாக திருப்பி சொல்றயா? புதுசா சொல்லு டா"

இன்னொரு ரவுண்டு போனது.

"அணத்த விட்ரா. காசு அதிகமா இருந்தாலே ஒருத்தனையும் மதிகரதில்லை மச்சி. சாப்ட்வேர் வேலைய வுட்டுட்டு கட்டட வேலை செஞ்சோம். காசு கொஞ்சம் வந்தாலும் நம்மளால ஏதோ சந்தோசமா இருக்க முடியுது. நம்ம கூட வேலை பாக்கறவங்கள பாரு டா. என்ன பாத்ருகாங்க வாழ்க்கைல? அவங்க முன்னாடி சீன் வுட்டா அவங்க கடுப்பு ஆவாங்களா மாட்டாங்களா? அதான் திருடலாம்ன்னு சொல்றேன். இப்போ சொல்லு, யார் கிட்ட திருடலாம்?"

"ஹீ ஹீ.. மொதல்ல நாம இருக்கற சோசியல் டிவிஷனப்பத்தி சொல்லு பாப்போம்?"

"ஒ கே.. மொதல்ல சூப்பர் சொசைட்டி...பரம்பரை பணக்காரன்.. அவன லூசுல விடு.. புதுப் பணக்காரண புடி... நமக்குத் தெரிஞ்சே நூறு பேராவது இருப்பாங்க. அவங்கள தூக்குவோம் மச்சி"

"எப்டி தூகப்போறோம்? என்னத்த தூகப்போறோம்? நீ பைசா சுருட்டினாலும் இந்த மக்கள் வாங்கிப்பாங்களா?"

"கஷ்டம் தான். பட் என்ன பண்றது. கவர்மன்ட் செய்ய வேண்டிய வேலைய நம்ம செய்ய பாக்கறோம்"

"கவர்மன்ட் மேல இருந்த நம்பிக்கைலாம் எப்போவோ பறந்து போயாச்சு"

"செரியா சொன்ன. இன்னொரு ரவுண்டு ஊத்து"

"ஒன்னும் இல்ல ஊத்த. இந்தா, பீடி அடி", ரங்கா பீடியை கொளுத்தி ராஜனிடம் கொடுத்தான்.

"ரெண்டு பேறும் குடும்பங்கள எதித்துகிட்டு வெளில்ல வந்தாச்சு. அப்பன் மாமான்னு ஒரு உறவும் கடயாது. இத விட்டா வேற சான்ஸ் இல்லே டா. ரிஸ்க் எடுப்போமடா"

"ரிஸ்க்கு வந்து நமக்கு ரஸ்க்கு சாப்ட்ரா மாதிரி"

"பஞ்ச். தலைவர் பாபால்ல சொன்ன வசனம் தான் ஞாபகம் வருது டா. 'அப்பன் மாமா சித்தப்பா அத்தைன்னு உறவுல வேகரதோட, ரெண்டு கட்டு வெரகுல வெந்துட்டு போய்டலாம்'..என்ன டயலாக்!"

"ஒனக்கு ஏறிப் போச்சு ராஜா.. படுத்து தூங்கு, நாளைக்கு லோடு வந்துரும்"

"அது வரட்டும்டா...எவனா இருந்தாலும் வெட்டுவேன். நாளைக்கு பாரு.. சும்மா டக்குன்னு எழுந்திருப்பேன் பாரு"

"இந்த மாதிரி பஞ்ச் பேசியே நாசமா போறோம் டா நம்ம. ஒண்ணுத்தையும் மாத்த முடியாது நம்பளால"

"பாப்போமடா.."

"இல்லே இத சொல்லு நீ...யாருக்கூட நம்பள்ளுக்கு பிரச்சனையே இல்லேன்னு சொல்லு பாப்போம்? அவன் சம்பாதிக்கறான், அவன் ஏதோ சீன் விடறான். நம்ப எதுக்கு கண்டுக்கணும்? வுட்டு தள்ளு"

"டேய் ரங்கா, கடுப்பாகுது டா.."

"லூசுல விடு...நாளைக்கு பேசிக்கலாம்...இப்போ படு.."

ஒரு வழியாக இரண்டு பேரும் தூங்கி விட்டார்கள். காலையில் ராஜன் எழுந்தான், காலை ஆறு மணிக்கு. ரங்கன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். தலை வலித்துக்கொண்டிருந்தது. இரண்டு டம்பளர் தண்ணீரைக் குடித்தான். 

"டேய் ரங்கா..எந்திரி டா.. மாணிக்கம் அண்ணே வந்துடுவாரு..."

ரங்கன் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தான். 

"என்ன ராஜா...நேத்து பேசினது எதாவது ஞாபகம் இருக்கா?"

"அப் கோர்ஸ்.. நமக்கு தேவை பைசா தானே.. அது எங்க பொழங்கிட்டிருக்குன்னு எனக்கு தெரியும். பைசா கைல வந்தா நாம நல்லது செய்யலாம்"

"எங்கேர்ந்து டா பைசா வரும்? இருந்த நல்ல வேலையும் வுட்டாச்சு.. இப்போ செங்கல் தூக்கிற்றுக்கோம். என்னத்த செய்ய?"

"நீ பீல் பண்ணாதே.. இந்த மாசம் மிச்ச சம்பளத்த வாங்கி இன்டர்நெட் செனட்டர் போவோம் வா"

"என்ன டா சொல்ற?"

"வா டா.. பார்கிளேஸ் பாங்கு ரெண்டு ஐ டி ஆளுங்கள தேடறாங்களாம். எக்சல் ஷீட்டு எடிட் பண்ண மாசம் ஒரு லட்சம் தராங்களாம். HR ஆளு நம்ப மகேஷ் தான். வேலை கடச்சா மாதிரி தான்"

"சரி டா.. பட் பாங்க்ல வேலை செஞ்சு நல்லது எப்படி செய்றது?"

"முட்டாள்...Investment பாங்க்ல எல்லாமே திருட்டு பணம் தான் டா..சூதாடி சுழண்ட பணம்.. அதுலேர்ந்து திருடரதுல தப்பு இல்லையே? வா திருடலாம்"

"ரங்கநாதா...காப்பாத்து.."

ஐந்து வருடங்கள் கழித்து...

தொலைப்பேசி அடித்தது. ரங்கா அதை எடுத்தான்.  

"ஹல்லோ..ரங்கநாதன் ஹியர், ஹூ இஸ் திஸ்?"

"டேய் ரங்கா, நான் ராஜ் டா..ராஜா"

"ராஜா... எப்டி டா இருக்க? வேர் தி ஹெல் ஆர் யு?"

"Deutsche Bank சிங்காப்பூர். AVP. நீ சிங்கபூருல இருக்கேன்னு என் Barcap எக்ஸ் கலீக் சொன்னான், தீபன் டா"

"ஒ, எஸ் எஸ்.. பிசினெஸ் ட்ரிப்"

"சூப்பர். லெட் அஸ் மீட் டுடே ஈவேனிங் மான்.. ஐ காட் எ ஹியூஜ் போனஸ், யு நோ? ஒரு பென்ட்லி கார் வாங்கிட்டேன் மான்.."

"ஆஸம்..எவ்ளோ டா?"

"முப்பது மில்லியன் டா.."

"ரியல்லி? சூப்பர்.. ஹ ஹ ஹா..", ரங்கன் சிரித்தான்.

"ஏன் டா சிரிக்கற?"

"ஒன்னும் இல்ல, பழஸ்ஸ நெனச்சேன்..விடு.. சிட்டி ஹால் Brotzeit அட் 6 "

"சுவர்.. சி யு தேர்..பாய் டா.."

ரங்கன் என்கிற ரங்கநாத சேஷாத்ரி தொலைப்பேசியை கீழே வைத்தான். ஆறு மணிக்கு அவன் நெருங்கிய நண்பனான ராஜாமணி அய்யரை சந்திக்கப்போவதை நினைத்து சந்தோஷப்பட்டான். 

4 கருத்துகள்:

  1. சார், என்ன சொல்ல வர்றீங்க?

    - சுபி

    பதிலளிநீக்கு
  2. பணம் ஒருவரின் குணத்தை மாற்றி விடும், இது சாதாரணமான கருத்து. அலுத்துப்போன கருத்து. நான் கூற வருவது, இயற்கையாகவே யாராலும் நல்லவர்களாக இருக்க முடியாது. உண்மையான நல்லவர்கள், சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள், செய்து விடுவார்கள்.

    ராஜனும் ரங்கனும் உலகம் பார்க்காமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள். அனுபவம் தான் அவர்களை அடையாளம் காட்டும். இந்த சிறுகதையில் அவர்கள் அறியாமைல் தத்தளிப்பது தெரியாமல் அலைந்துக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
  3. Hahahaha...Semma da Krishna! Kittathatta ellaarume idhey nelamaila thaan irukkom.

    ViDiyal varum....kaaththirukkiren! :)

    - Adithi

    பதிலளிநீக்கு