முத்து அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் உள்ள மக்டொனால்டில் தனியாக
அமர்ந்திருந்தான். அவனை சுற்றிலும் வெள்ளைக்கார ஜனங்கள் தான் பெரும்பாலும்
இருந்தனர். அவர்களை நேராகப் பார்ப்பதில் பயம் கொண்ட இவன், ஒரு புத்தகத்தை
புரட்டிக்கொண்டிருந்தான். புதுசாக வாங்கிய தொலைப்பேசியில் பாடல்
கேட்டுக்கொண்டிருந்தான்.
"ஆசையே அலைபோலே..நாமெல்லாம் அதன் மேலே.. ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.."
ஓரக்கண்ணாலேயே மட்டும் உள்ளே வந்து போகும் பெண்களை பார்த்துக்கொண்டிருந்தான். இவன் பார்க்கிறான் என்று தெரிந்து அவர்கள் இவனைப்பார்த்தல் வெகு திறமையாக புத்தகத்தை படிப்பதுப்போல் பாவலா காட்ட ஆரம்பித்துவிடுவான். உண்மை என்னவென்றால், அவர்கள் இவனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தங்கள் காரியங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். முத்துவிற்கு அப்படி என்னவோ ஒரு தோணல், எல்லோரும் இவனையே கவனிப்பதுப்போல். பத்தமடை ஹை ஸ்கூலில் படித்து அவன் கிராமத்திலிருந்தே முதன் முதலாக அமெரிக்கா வந்தவன் இவன் மட்டும் தான். கல்லூரி படிப்பிற்குப் பிறகு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்து இவனை இங்கு அனுப்பிவிட்டார்கள். அந்த மாலை நேரத்தில், கதவு திறந்தது, ENTER அழகிய பெண்.
சினிமாவில் வருவது போல முத்துவின் கண்கள் அவள் மீது விழுந்தன. சுற்றுப்புறத்தை உடனே மறந்தான். புத்தகத்தை கீழேப் போட்டான். அவன் கண்கள் அவளை விட்டு அசைவதர்க்கில்லை.
"வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது, குளுகுளு தென்றல் காற்றும் வீசுது.."
"என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்", முத்து நினைத்தான்.
அழகு என்றால் அப்படி ஒரு அழகு. வருணிக்கவே முடியாது போலிருக்கிறது. இதில் சுவாரஸியமான விஷயம் என்னவென்றால் அவள் தோற்றத்தில் ஒரு தமிழ் பெண் போலவே இருந்தாள். அவள் இவனைப்பார்க்கவில்லை. நேராக பர்கர் வாங்க கியூவில் நின்றாள்.
"நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்"
பர்கர் வாங்கிவிட்டு திரும்பினாள். உட்கார இடம் ஏதும் இல்லை. அவள் முத்துவின்முன் உள்ள காலியான இடத்தைப்பார்த்த பிறகு முத்துவின் பாவலா தொடரலானது. நேராக அவள் முத்துவின்பால் நடந்து வந்தாள். அப்போது..
"எக்ஸ்கியூஸ் மீ.. இஸ் தி சீட் டேக்கன்?"
முத்து ஹெட் செட்டை கழட்டிவிட்டு, வழிந்தான்.
"நோ நோ நோ..ப்ளீஸ் சிட்..", அசட்டு சிரிப்பு சிரித்தான்.
"தேங்க்ஸ்", பர்கரை மேஜைமேல் வைத்துவிட்டு அமர்ந்தாள். முத்துவால் நம்ப முடியவில்லை. பல்ஸ் மீட்டரைப் வைத்தால் அவன் இருதயம் பிரட் லீ போடும் பந்தை விட வேகமாக அடித்து கொண்டிருப்பதை நாம் அறிந்திருப்போம்.
"ஹாய்.. ஐ அம் சான்ட்ரா.. ", தன் கையை நீட்டினாள்.
"ஹல்லோ.. ஐ அம் முத்துக்குமரன். இன் ஷார்ட்டு, முத்து...", கைக்கொடுத்தான். பேச்சு வரவில்லை.
"ஆர் யூ பிரம் இந்தியா?"
"எஸ். ஐ அம் பிரம் சென்னை. யூ நோ பில்ட்டர் காபி? தட் பிளேஸ்", வேண்டாத உதார்விட்டான். பத்தமடை என்று சொன்னால் துரத்தி அடித்து விடுவாளோ என்று ஒரு பயம்.
"ஓ..தமிலா?", என்றாள். முத்து தொலைப்பேசியை கீழேப்போட்டுவிட்டான். அவள் சிரித்தாள். ஸ்ரேயாவும் கிம் கார்தேஷியானும் சேர்ந்து செய்த கலவைப்பெண் போல ஒரு புன்னகை.
"நம்பவே முடியல. நீங்களும் சென்னையா?"
"நோ நோ.. கோயம்பத்தூர்.. பட், நான் இங்கேதான் வளந்தேன்.."
"வெறி நைஸ்.. நான் ஆக்சுவலி பிரம் பத்தமடை.. நியர் திருநெல்வேலி.. சுமால் வில்லேஜ்"
"ஓ அப்படியா.. நைஸ்.. இங்க என்ன பண்றீங்க?"
"டேக் சாப்ட் கம்பனில இஞ்சினியர்..நீங்க?"
"நான்.. மார்கெடிங்.. எக்சிகியூடிவ் சர்வீஸ்.."
"சூப்பர்..", முத்துவிற்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னது, "அமெரிக்கர்கள் எல்லாரும் ஓப்பன் டைப்". கடலை போட ஆரம்பித்தான்.
"எப்டிங்க இவ்வளோ அழகா இருக்கீங்க?", என்று குபுக்கென்று கேட்டான். கேடி. பத்தமடையில் எவ்வளவு கலைச்செல்வியுடனும் கோப்பெரும்தேவியுடனும் கடலை போட்டிருப்பான்.
சான்ட்ரா சிரித்தாள். "தேங்க்ஸ்" என்று சிறு புன்னகைப்புரிந்தாள்.
"உங்க நிஜப்பேரும் சான்ட்ரா தானா?'
"சந்திரலட்சுமி. சான்ட்ரா, சுருக்கமா.."
"நைஸ்..என்னங்க, நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லலாமா?"
"கோ அஹெட்..", பர்கரை எடுத்தாள்.
"நான் ரொம்ப ஓபன் டைப்புங்க. மனசுலப்பட்டதை அப்படியே சொல்லிடுவேன். இப்போ என் மனசுல ஒரு விஷயம் இருக்கு. சொல்லத்தயக்கமாகவும் இருக்கு", கீழே பார்த்துக்கொண்டு பேசினான்.
சான்ட்ராவிற்கு என்ன வரப்போகிறதென்று தெரிந்து விட்டது. பர்கரை கீழே வைத்தாள்.
"ஐ லவ் யூ. பாத்தவொடனே லவ் வந்த்ருச்சு.", என்றான். பல்ஸ் ரேட்டு ஏற ஆரம்பித்தது.
சான்ட்ரா நிதானமாக, "வை டூ யூ சேய் தட்? ரீசென் குடு"
"நீங்க அவ்வளோ அழகு..இவ்வளோ அழக நா பாத்ததில்ல.. அண்ட் ஐ அம் இன் லவ் வித் யூ.."
"முன்தினம் பார்த்தேனே..பார்த்ததும் தோற்றேன்..", ஹெட் செட்டிலிருந்து பாடல் ஒலித்தது.
"என்ன டைமிங்" என்று முத்து நினைத்துக்கொண்டான். பூவைக்கொடுத்து விட்டோம், இனி அதை வாங்கிக்கொள்வது அவள் இஷ்டம் என்று நினைத்துக்கொண்டான்.
"சாரி. சீட் இல்லையேன்னுதான் இங்க ஒக்காந்தேன். லீவ் தாட். இந்த லவ் எல்லாம் எனக்கு, ஐ கான்ட்..", தலை மேல் கை வைத்தாள்.
"வை? நான் பாக்க கருப்பா இருக்கரதுனாலையா? நான் நல்லா சம்பாதிக்கிறேன். என்ன பிராப்ளம்?"
"ஹ்ம்ம்.. அப்போ ஒரு நைட்டுக்கு 200 டாலர்ஸ். செரியா? யுவர் ஹவுஸ்."
ஒரு நொடிக்கு முத்துவின் இருதயம் நின்றது. அதிர்ச்சி தாங்க முடியவில்லை. புத்தகத்தில் உள்ள ஓஷோவின் முகத்தை பார்த்து கொண்டு தன்னையே சாந்தபடுத்திகொண்டான்.
"ஒரு நல்ல பொண்ணா இருந்தா நான் லவ் யூ சொன்னதுக்கு செருப்பாலேயே அடிச்சுருப்பா. நல்ல வேளை. இவளும் ஒரு ராத்ரிக்கு செரிதான்னு நெனக்கறேன். வேற என்ன இருக்கு என் வாழ்க்கைல. சரி சொல்லிடுவோம்" என்று நினைத்துக்கொண்டான்.
"வாட் ஆர் யூ திங்கிங்?", என்று புன்னகைத்தாள்.
"சேரி. 200 ஜாஸ்தி. 150 தரேன். செரியா?"
"அப்போ அஞ்சு மணி நேரம் தான்"
"ப்ளீஸ். நானும் தமிழ், நீயும் தமிழ். ஒரு தடவை.."
சான்ட்ரா புன்னகைத்து, "பாவமா இருக்கயே நீ. சரி. இப்போவே போலாமா?" என்றாள்.
"அப் கோர்ஸ். யூ பினிஷ் யுவர் பூட்"
"ஷுவர்", என்று சாப்பிட ஆரம்பித்தாள்.
"பட் வன் திங் நான் சொல்லணும். ஐ அம் எ டிரான்ஸ். உனக்கு ஒகே வா?"
"அப்டின்னா", என்றான்.
"நான் பொண்ணு கடயாது. ரெண்டுங்கெட்டான். இங்க இது ரொம்ப பாப்புலர்"
முத்து சான்ட்ராவைப்பார்த்தான், கண்களை மூடினான்.
"என்ன கொடுமை குமரா", என்று தலை மேல் கையை வைத்தான். ஹெட் செட்டை மாட்டிக்கொண்டான். எழுந்து,
"ஐ அம் சாரி. ஐ கான்ட்",
என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். அவன் தொலைப்பேசியில் பாடல் ஆரம்பித்தது..
"சோதனை மேல் சோதனை...போதுமடா சாமி.."
என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்கு என்று நினைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் விரைவாக நடந்தான்.
"வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.."
"ஆசையே அலைபோலே..நாமெல்லாம் அதன் மேலே.. ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.."
ஓரக்கண்ணாலேயே மட்டும் உள்ளே வந்து போகும் பெண்களை பார்த்துக்கொண்டிருந்தான். இவன் பார்க்கிறான் என்று தெரிந்து அவர்கள் இவனைப்பார்த்தல் வெகு திறமையாக புத்தகத்தை படிப்பதுப்போல் பாவலா காட்ட ஆரம்பித்துவிடுவான். உண்மை என்னவென்றால், அவர்கள் இவனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தங்கள் காரியங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். முத்துவிற்கு அப்படி என்னவோ ஒரு தோணல், எல்லோரும் இவனையே கவனிப்பதுப்போல். பத்தமடை ஹை ஸ்கூலில் படித்து அவன் கிராமத்திலிருந்தே முதன் முதலாக அமெரிக்கா வந்தவன் இவன் மட்டும் தான். கல்லூரி படிப்பிற்குப் பிறகு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்து இவனை இங்கு அனுப்பிவிட்டார்கள். அந்த மாலை நேரத்தில், கதவு திறந்தது, ENTER அழகிய பெண்.
சினிமாவில் வருவது போல முத்துவின் கண்கள் அவள் மீது விழுந்தன. சுற்றுப்புறத்தை உடனே மறந்தான். புத்தகத்தை கீழேப் போட்டான். அவன் கண்கள் அவளை விட்டு அசைவதர்க்கில்லை.
"வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது, குளுகுளு தென்றல் காற்றும் வீசுது.."
"என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்", முத்து நினைத்தான்.
அழகு என்றால் அப்படி ஒரு அழகு. வருணிக்கவே முடியாது போலிருக்கிறது. இதில் சுவாரஸியமான விஷயம் என்னவென்றால் அவள் தோற்றத்தில் ஒரு தமிழ் பெண் போலவே இருந்தாள். அவள் இவனைப்பார்க்கவில்லை. நேராக பர்கர் வாங்க கியூவில் நின்றாள்.
"நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்"
பர்கர் வாங்கிவிட்டு திரும்பினாள். உட்கார இடம் ஏதும் இல்லை. அவள் முத்துவின்முன் உள்ள காலியான இடத்தைப்பார்த்த பிறகு முத்துவின் பாவலா தொடரலானது. நேராக அவள் முத்துவின்பால் நடந்து வந்தாள். அப்போது..
"எக்ஸ்கியூஸ் மீ.. இஸ் தி சீட் டேக்கன்?"
முத்து ஹெட் செட்டை கழட்டிவிட்டு, வழிந்தான்.
"நோ நோ நோ..ப்ளீஸ் சிட்..", அசட்டு சிரிப்பு சிரித்தான்.
"தேங்க்ஸ்", பர்கரை மேஜைமேல் வைத்துவிட்டு அமர்ந்தாள். முத்துவால் நம்ப முடியவில்லை. பல்ஸ் மீட்டரைப் வைத்தால் அவன் இருதயம் பிரட் லீ போடும் பந்தை விட வேகமாக அடித்து கொண்டிருப்பதை நாம் அறிந்திருப்போம்.
"ஹாய்.. ஐ அம் சான்ட்ரா.. ", தன் கையை நீட்டினாள்.
"ஹல்லோ.. ஐ அம் முத்துக்குமரன். இன் ஷார்ட்டு, முத்து...", கைக்கொடுத்தான். பேச்சு வரவில்லை.
"ஆர் யூ பிரம் இந்தியா?"
"எஸ். ஐ அம் பிரம் சென்னை. யூ நோ பில்ட்டர் காபி? தட் பிளேஸ்", வேண்டாத உதார்விட்டான். பத்தமடை என்று சொன்னால் துரத்தி அடித்து விடுவாளோ என்று ஒரு பயம்.
"ஓ..தமிலா?", என்றாள். முத்து தொலைப்பேசியை கீழேப்போட்டுவிட்டான். அவள் சிரித்தாள். ஸ்ரேயாவும் கிம் கார்தேஷியானும் சேர்ந்து செய்த கலவைப்பெண் போல ஒரு புன்னகை.
"நம்பவே முடியல. நீங்களும் சென்னையா?"
"நோ நோ.. கோயம்பத்தூர்.. பட், நான் இங்கேதான் வளந்தேன்.."
"வெறி நைஸ்.. நான் ஆக்சுவலி பிரம் பத்தமடை.. நியர் திருநெல்வேலி.. சுமால் வில்லேஜ்"
"ஓ அப்படியா.. நைஸ்.. இங்க என்ன பண்றீங்க?"
"டேக் சாப்ட் கம்பனில இஞ்சினியர்..நீங்க?"
"நான்.. மார்கெடிங்.. எக்சிகியூடிவ் சர்வீஸ்.."
"சூப்பர்..", முத்துவிற்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னது, "அமெரிக்கர்கள் எல்லாரும் ஓப்பன் டைப்". கடலை போட ஆரம்பித்தான்.
"எப்டிங்க இவ்வளோ அழகா இருக்கீங்க?", என்று குபுக்கென்று கேட்டான். கேடி. பத்தமடையில் எவ்வளவு கலைச்செல்வியுடனும் கோப்பெரும்தேவியுடனும் கடலை போட்டிருப்பான்.
சான்ட்ரா சிரித்தாள். "தேங்க்ஸ்" என்று சிறு புன்னகைப்புரிந்தாள்.
"உங்க நிஜப்பேரும் சான்ட்ரா தானா?'
"சந்திரலட்சுமி. சான்ட்ரா, சுருக்கமா.."
"நைஸ்..என்னங்க, நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லலாமா?"
"கோ அஹெட்..", பர்கரை எடுத்தாள்.
"நான் ரொம்ப ஓபன் டைப்புங்க. மனசுலப்பட்டதை அப்படியே சொல்லிடுவேன். இப்போ என் மனசுல ஒரு விஷயம் இருக்கு. சொல்லத்தயக்கமாகவும் இருக்கு", கீழே பார்த்துக்கொண்டு பேசினான்.
சான்ட்ராவிற்கு என்ன வரப்போகிறதென்று தெரிந்து விட்டது. பர்கரை கீழே வைத்தாள்.
"ஐ லவ் யூ. பாத்தவொடனே லவ் வந்த்ருச்சு.", என்றான். பல்ஸ் ரேட்டு ஏற ஆரம்பித்தது.
சான்ட்ரா நிதானமாக, "வை டூ யூ சேய் தட்? ரீசென் குடு"
"நீங்க அவ்வளோ அழகு..இவ்வளோ அழக நா பாத்ததில்ல.. அண்ட் ஐ அம் இன் லவ் வித் யூ.."
"முன்தினம் பார்த்தேனே..பார்த்ததும் தோற்றேன்..", ஹெட் செட்டிலிருந்து பாடல் ஒலித்தது.
"என்ன டைமிங்" என்று முத்து நினைத்துக்கொண்டான். பூவைக்கொடுத்து விட்டோம், இனி அதை வாங்கிக்கொள்வது அவள் இஷ்டம் என்று நினைத்துக்கொண்டான்.
"சாரி. சீட் இல்லையேன்னுதான் இங்க ஒக்காந்தேன். லீவ் தாட். இந்த லவ் எல்லாம் எனக்கு, ஐ கான்ட்..", தலை மேல் கை வைத்தாள்.
"வை? நான் பாக்க கருப்பா இருக்கரதுனாலையா? நான் நல்லா சம்பாதிக்கிறேன். என்ன பிராப்ளம்?"
"ஹ்ம்ம்.. அப்போ ஒரு நைட்டுக்கு 200 டாலர்ஸ். செரியா? யுவர் ஹவுஸ்."
ஒரு நொடிக்கு முத்துவின் இருதயம் நின்றது. அதிர்ச்சி தாங்க முடியவில்லை. புத்தகத்தில் உள்ள ஓஷோவின் முகத்தை பார்த்து கொண்டு தன்னையே சாந்தபடுத்திகொண்டான்.
"ஒரு நல்ல பொண்ணா இருந்தா நான் லவ் யூ சொன்னதுக்கு செருப்பாலேயே அடிச்சுருப்பா. நல்ல வேளை. இவளும் ஒரு ராத்ரிக்கு செரிதான்னு நெனக்கறேன். வேற என்ன இருக்கு என் வாழ்க்கைல. சரி சொல்லிடுவோம்" என்று நினைத்துக்கொண்டான்.
"வாட் ஆர் யூ திங்கிங்?", என்று புன்னகைத்தாள்.
"சேரி. 200 ஜாஸ்தி. 150 தரேன். செரியா?"
"அப்போ அஞ்சு மணி நேரம் தான்"
"ப்ளீஸ். நானும் தமிழ், நீயும் தமிழ். ஒரு தடவை.."
சான்ட்ரா புன்னகைத்து, "பாவமா இருக்கயே நீ. சரி. இப்போவே போலாமா?" என்றாள்.
"அப் கோர்ஸ். யூ பினிஷ் யுவர் பூட்"
"ஷுவர்", என்று சாப்பிட ஆரம்பித்தாள்.
"பட் வன் திங் நான் சொல்லணும். ஐ அம் எ டிரான்ஸ். உனக்கு ஒகே வா?"
"அப்டின்னா", என்றான்.
"நான் பொண்ணு கடயாது. ரெண்டுங்கெட்டான். இங்க இது ரொம்ப பாப்புலர்"
முத்து சான்ட்ராவைப்பார்த்தான், கண்களை மூடினான்.
"என்ன கொடுமை குமரா", என்று தலை மேல் கையை வைத்தான். ஹெட் செட்டை மாட்டிக்கொண்டான். எழுந்து,
"ஐ அம் சாரி. ஐ கான்ட்",
என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். அவன் தொலைப்பேசியில் பாடல் ஆரம்பித்தது..
"சோதனை மேல் சோதனை...போதுமடா சாமி.."
என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்கு என்று நினைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் விரைவாக நடந்தான்.
"வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.."