வெள்ளி, 20 ஜனவரி, 2012

சிட்டுவேஷன் சாங்க்ஸ்

முத்து அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் உள்ள மக்டொனால்டில் தனியாக அமர்ந்திருந்தான். அவனை சுற்றிலும் வெள்ளைக்கார ஜனங்கள் தான் பெரும்பாலும் இருந்தனர். அவர்களை நேராகப் பார்ப்பதில் பயம் கொண்ட இவன், ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான். புதுசாக வாங்கிய தொலைப்பேசியில் பாடல் கேட்டுக்கொண்டிருந்தான்.

"ஆசையே அலைபோலே..நாமெல்லாம் அதன் மேலே.. ஓடம் போலே ஆடிடுவோமே  வாழ்நாளிலே.."

ஓரக்கண்ணாலேயே மட்டும் உள்ளே வந்து போகும் பெண்களை பார்த்துக்கொண்டிருந்தான். இவன் பார்க்கிறான் என்று தெரிந்து அவர்கள் இவனைப்பார்த்தல் வெகு திறமையாக புத்தகத்தை படிப்பதுப்போல் பாவலா காட்ட ஆரம்பித்துவிடுவான். உண்மை என்னவென்றால், அவர்கள் இவனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தங்கள் காரியங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். முத்துவிற்கு அப்படி என்னவோ ஒரு தோணல், எல்லோரும் இவனையே கவனிப்பதுப்போல். பத்தமடை ஹை ஸ்கூலில் படித்து அவன் கிராமத்திலிருந்தே முதன் முதலாக அமெரிக்கா வந்தவன் இவன் மட்டும் தான். கல்லூரி படிப்பிற்குப் பிறகு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்து இவனை இங்கு அனுப்பிவிட்டார்கள். அந்த மாலை நேரத்தில், கதவு திறந்தது, ENTER அழகிய பெண்.

சினிமாவில் வருவது போல முத்துவின் கண்கள் அவள் மீது விழுந்தன. சுற்றுப்புறத்தை உடனே மறந்தான். புத்தகத்தை கீழேப் போட்டான். அவன் கண்கள் அவளை விட்டு அசைவதர்க்கில்லை.

"வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது, குளுகுளு தென்றல் காற்றும் வீசுது.."


"என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்", முத்து நினைத்தான்.

அழகு என்றால் அப்படி ஒரு அழகு. வருணிக்கவே முடியாது போலிருக்கிறது. இதில் சுவாரஸியமான விஷயம் என்னவென்றால் அவள் தோற்றத்தில் ஒரு தமிழ் பெண் போலவே இருந்தாள். அவள் இவனைப்பார்க்கவில்லை. நேராக பர்கர் வாங்க கியூவில் நின்றாள்.

"நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்"


பர்கர் வாங்கிவிட்டு திரும்பினாள். உட்கார இடம் ஏதும் இல்லை. அவள் முத்துவின்முன் உள்ள காலியான இடத்தைப்பார்த்த பிறகு முத்துவின் பாவலா தொடரலானது. நேராக அவள் முத்துவின்பால் நடந்து வந்தாள். அப்போது..

"எக்ஸ்கியூஸ் மீ.. இஸ் தி சீட் டேக்கன்?"

முத்து ஹெட் செட்டை கழட்டிவிட்டு, வழிந்தான்.

"நோ நோ நோ..ப்ளீஸ் சிட்..", அசட்டு சிரிப்பு சிரித்தான்.

"தேங்க்ஸ்", பர்கரை மேஜைமேல் வைத்துவிட்டு அமர்ந்தாள். முத்துவால் நம்ப முடியவில்லை. பல்ஸ் மீட்டரைப் வைத்தால் அவன் இருதயம் பிரட் லீ போடும் பந்தை விட வேகமாக அடித்து கொண்டிருப்பதை நாம் அறிந்திருப்போம்.

"ஹாய்.. ஐ அம் சான்ட்ரா.. ", தன் கையை நீட்டினாள்.

"ஹல்லோ.. ஐ அம் முத்துக்குமரன். இன் ஷார்ட்டு, முத்து...", கைக்கொடுத்தான். பேச்சு வரவில்லை.

"ஆர் யூ பிரம் இந்தியா?"

"எஸ். ஐ அம் பிரம் சென்னை. யூ நோ பில்ட்டர் காபி? தட் பிளேஸ்", வேண்டாத உதார்விட்டான். பத்தமடை என்று சொன்னால் துரத்தி அடித்து விடுவாளோ என்று ஒரு பயம்.

"ஓ..தமிலா?", என்றாள். முத்து தொலைப்பேசியை கீழேப்போட்டுவிட்டான். அவள் சிரித்தாள். ஸ்ரேயாவும் கிம் கார்தேஷியானும் சேர்ந்து செய்த கலவைப்பெண்  போல ஒரு புன்னகை.

"நம்பவே முடியல. நீங்களும் சென்னையா?"

"நோ நோ.. கோயம்பத்தூர்.. பட், நான் இங்கேதான் வளந்தேன்.."

"வெறி நைஸ்.. நான் ஆக்சுவலி பிரம் பத்தமடை.. நியர் திருநெல்வேலி.. சுமால் வில்லேஜ்"

"ஓ அப்படியா.. நைஸ்.. இங்க என்ன பண்றீங்க?"

"டேக் சாப்ட் கம்பனில இஞ்சினியர்..நீங்க?"

"நான்.. மார்கெடிங்.. எக்சிகியூடிவ் சர்வீஸ்.."

"சூப்பர்..", முத்துவிற்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் நண்பர்கள் அவனிடம் சொன்னது, "அமெரிக்கர்கள் எல்லாரும் ஓப்பன் டைப்". கடலை போட ஆரம்பித்தான்.

"எப்டிங்க இவ்வளோ அழகா இருக்கீங்க?", என்று குபுக்கென்று கேட்டான். கேடி. பத்தமடையில் எவ்வளவு கலைச்செல்வியுடனும் கோப்பெரும்தேவியுடனும் கடலை போட்டிருப்பான்.

சான்ட்ரா சிரித்தாள். "தேங்க்ஸ்" என்று சிறு புன்னகைப்புரிந்தாள்.

"உங்க நிஜப்பேரும் சான்ட்ரா தானா?'

"சந்திரலட்சுமி. சான்ட்ரா, சுருக்கமா.."

"நைஸ்..என்னங்க, நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லலாமா?"

"கோ அஹெட்..", பர்கரை எடுத்தாள்.

"நான் ரொம்ப ஓபன் டைப்புங்க. மனசுலப்பட்டதை அப்படியே சொல்லிடுவேன். இப்போ என் மனசுல ஒரு விஷயம் இருக்கு. சொல்லத்தயக்கமாகவும் இருக்கு", கீழே பார்த்துக்கொண்டு பேசினான்.

சான்ட்ராவிற்கு என்ன வரப்போகிறதென்று தெரிந்து விட்டது. பர்கரை கீழே வைத்தாள்.

"ஐ லவ் யூ. பாத்தவொடனே லவ் வந்த்ருச்சு.", என்றான். பல்ஸ் ரேட்டு ஏற ஆரம்பித்தது.

சான்ட்ரா நிதானமாக, "வை டூ யூ சேய் தட்? ரீசென் குடு"

"நீங்க அவ்வளோ அழகு..இவ்வளோ அழக நா பாத்ததில்ல.. அண்ட் ஐ அம் இன் லவ் வித் யூ.."

"முன்தினம் பார்த்தேனே..பார்த்ததும் தோற்றேன்..", ஹெட் செட்டிலிருந்து பாடல் ஒலித்தது.

"என்ன டைமிங்" என்று முத்து நினைத்துக்கொண்டான். பூவைக்கொடுத்து விட்டோம், இனி அதை வாங்கிக்கொள்வது அவள் இஷ்டம் என்று நினைத்துக்கொண்டான்.

"சாரி. சீட் இல்லையேன்னுதான் இங்க ஒக்காந்தேன். லீவ் தாட். இந்த லவ் எல்லாம் எனக்கு, ஐ கான்ட்..", தலை மேல் கை வைத்தாள்.

"வை? நான் பாக்க கருப்பா இருக்கரதுனாலையா? நான் நல்லா சம்பாதிக்கிறேன். என்ன பிராப்ளம்?"

"ஹ்ம்ம்.. அப்போ ஒரு நைட்டுக்கு 200 டாலர்ஸ். செரியா? யுவர் ஹவுஸ்."

ஒரு நொடிக்கு முத்துவின் இருதயம் நின்றது. அதிர்ச்சி தாங்க முடியவில்லை. புத்தகத்தில் உள்ள ஓஷோவின் முகத்தை பார்த்து கொண்டு தன்னையே சாந்தபடுத்திகொண்டான்.

"ஒரு நல்ல பொண்ணா இருந்தா நான் லவ் யூ சொன்னதுக்கு செருப்பாலேயே அடிச்சுருப்பா. நல்ல வேளை. இவளும் ஒரு ராத்ரிக்கு செரிதான்னு நெனக்கறேன். வேற என்ன இருக்கு என் வாழ்க்கைல. சரி சொல்லிடுவோம்" என்று நினைத்துக்கொண்டான்.

"வாட் ஆர் யூ திங்கிங்?", என்று புன்னகைத்தாள்.

"சேரி. 200 ஜாஸ்தி. 150 தரேன். செரியா?"

"அப்போ அஞ்சு மணி நேரம் தான்"

"ப்ளீஸ். நானும் தமிழ், நீயும் தமிழ். ஒரு தடவை.."

சான்ட்ரா புன்னகைத்து, "பாவமா இருக்கயே நீ. சரி. இப்போவே போலாமா?" என்றாள்.

"அப் கோர்ஸ். யூ பினிஷ் யுவர் பூட்"

"ஷுவர்", என்று சாப்பிட ஆரம்பித்தாள்.

"பட் வன் திங் நான் சொல்லணும். ஐ அம் எ டிரான்ஸ். உனக்கு ஒகே வா?"

"அப்டின்னா", என்றான்.

"நான் பொண்ணு கடயாது. ரெண்டுங்கெட்டான். இங்க இது ரொம்ப பாப்புலர்"

முத்து சான்ட்ராவைப்பார்த்தான், கண்களை மூடினான்.

"என்ன கொடுமை குமரா", என்று தலை மேல் கையை வைத்தான். ஹெட் செட்டை மாட்டிக்கொண்டான். எழுந்து,

"ஐ அம் சாரி. ஐ கான்ட்",

என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். அவன் தொலைப்பேசியில் பாடல் ஆரம்பித்தது..

"சோதனை மேல் சோதனை...போதுமடா சாமி.."

என்ன ஒரு சிட்டுவேஷன் சாங்கு என்று நினைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் விரைவாக நடந்தான்.

"வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.."





திங்கள், 16 ஜனவரி, 2012

அரக்கர்கள் இரண்டு பேர்..

இடம் 1

சேட்டு: சாப், வுட்ருங்கோ என்ன.. தப்பு பண்ணிட்டேன்.. மாப் கீஜியே..

(சேட்டின் மண்டையிலிருந்து இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. அவனை சுற்றி நான்கைந்து ரௌடிகள் இருந்தார்கள். சேட்டு தரையில் முட்டி போட்டுக்கொண்டு கிடந்தார், சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மனிதரை நோக்கி கதறிக் கொண்டிருந்தார். அய்யாவை திரையில் இப்போது பார்க்க முடியாது, அவர் முதுகு தெரியும்படியே காமிராவை வைக்கவேண்டும்)

ரௌடி: ராம்லால், இப்போ மன்னிப்பு கேட்டு இன்னா பிரயோஜனம்? அய்யாக்கிட்ட உன் புத்திய காமிச்சுட்ட பாத்தியா? ஒக்காளி உங்கள எல்லாம் ராஜஸ்த்தான் திருப்பி அனுப்பணமுடா..

(அய்யா துப்பாக்கியை ராம்லாலின் நெற்றியில் குறி பார்த்தார். ராம்லால் மேலும் கதற ஆரம்பித்தான்)

சேட்டு: எனக்கு ரண்டு பொண்ணு சாப்..வுட்ருங்கோ..

இடம் 2

மேனன் ஒரு தூணில் கட்டப்பட்டிருந்தான். உடம்பு முழுவதும் வேர்த்து ஊதிக்கொண்டிருன்தது, அவன் முகத்தில் பயம் நன்று விளங்கியது. எங்கிருந்தோ பூட்ஸ் சத்தம் கேட்டது. கண்ணிலிருந்து மேனனுக்கு நீர் வழிய ஆரம்பித்தது, ENTER கமுதி

(கமுதியின் முதுகை நோக்கித்தான் காமிரா இருக்கிறது)

கமுதி: மலையாளத்தான்.. (நக்கலாக சிரித்தான்) இன்னுமா தமிழ் பேச வராது ஒனக்கு?

மேனன்: I am a public servant..I will report to the authorities..

கமுதி: எண்டே அம்மே..எண்த்தான இத்தரை இங்கலீஷு ?

(கட்டையை எடுத்து மேனனின் காலில் ஓங்கி அடிதான்..மேனன் கதறினான்)

இடம் 1

சேட்டு: சாப், வேணாம் சாப்.. வேணாம்.. கலக்ட்டர்ட சொன்னதில்லாம் மேனன் தான்.. என்ன வுட்ருங்கோ சாப்..

ரௌடி: ஏய்.. யார்ட்ட பேசற.. இதக்கேளு..

(ரௌடி தன் தொலைபேசியை தட்டினான்.. சேட்டின் குரல் கேட்டது..)

சேட்டு: (தொலைபேசியில்) கலக்ட்டார் சாப்.. நான் நிம்பல்க்கோ அப்ரூவர் ஆரேன்.. இந்த மேனனும் அய்யசாப்பும் சேர்ந்துகிட்டு தான் டெண்டர்ல்ல ஜகடா சென்ஜ்ருக்காங்க... இருபத்தஞ்சு கோடி சாப்.. நான் வெறுமனே முத்துகிட்டே காசனுபிச்சேன்.. சாப், இந்த முத்து தான் அய்யசாபோட ரைட்டு ஹாண்டு.. வுட்ராதீங்க அவனையும்..

(ரௌடி தொலைபேசியை நிறுத்தினான்..சேட்டுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது..)

ரௌடி:  அய்யே.. ஒண்ணுக்கு புட்டான் தல இவன்.. ராஜஸ்தான்ல தண்ணியே இல்லன்னு சொல்றீங்க.. எங்க தண்ணிய குடிச்சுட்டு எங்க முன்னாடியே மூத்தரம் வேற போற நீ..

(பட் என்று புரமண்டையில் ஒரு தட்டு தட்டினான்..சேட்டு விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்)

(அய்யா ரௌடிகளைப்பார்த்து வெளியே போகுமாறு சமிக்ஞை செய்தார். எல்லோரும் வெளியேறினார்கள்)

அய்யா: இப்போ உன் கடைசி ஆசை என்ன?

 இடம் 2

மேனன்: அய்யா ஒன்ன சும்மா விடபோரதில்லை.. பட்டி..

கமுதி: ஒக்காளி.. அவன் பேர சொல்லாதே.. காசுன்னா நக்கிட்டுப்போற நாய் அது.. ஒன்னமாதிரி.. டெண்டர் எனக்கு வரத்தானே ஒனக்கு இருபத்தஞ்சு லட்சம் குடுத்தேன்.. இதுக்கு மேல நீ காச வெச்சு என்ன செய்யப்போற? ஹான்?

(மேனன் முழித்தான்.. ஏதோ ஒரு பேரபாயம் வரப்போவது அவனுக்கு நன்கு விளங்கியது..)

கமுதி: வருத்தமா இருக்கு டா.. மலையாளத்தான்.. உங்கள நம்பக்கூடதுன்னு சும்மாவா சொன்னாங்க? த்த.. புத்திய காமிச்சுட்ட பாத்தியா?!

(மேனன் மேலும் பயந்தான்.. கமுதி கட்டையை தூக்கி போட்டான்.. முதுகிலிருந்து ஒரு அருவாளை எடுத்தான்.. மேனனின் கண்கள் பிதுங்க ஆரம்பித்தது..)


இடம் 1

அய்யா: அது எப்டி உங்க வீட்டு ரொட்டிகளும் குட்டிகளும் எப்பவுமே வித்யாசமாவும் ருசியாவும் இருக்கு? பதில் சொல்லு சேட்ஜி..

(சேட்டை உயர்த்தி ஒரு நாற்காலியில் உட்க்கார வைத்தான் அய்யா)

சேட்டு: என் பொண்ணுகள ஒன்னும் செஞ்சுரதீங்கோ சாப்.. என்ன வேணா கதம் பண்ணிடுங்கோ..

(உரக்கக சிரித்தார் அய்யா)

அய்யா: பயபடாதே சேட்டு.. பொண்ணுகள விடு..இந்த சப்பாத்தி பத்தி மட்டும் சொல்லு.. என்ன போடறீங்க?

சேட்டு: எதுவும் இல்ல சாப்.. கோதுமே தான்..

அய்யா: எங்க ஊருல மட்டும் என்ன போடறாங்களாம்.. மாட்டு சாணியவா? வேற என்ன..

சேட்டு: நெய் சாப்.. நெரிய போடுவோம்..

அய்யா: அதானே பாத்தேன்.. இந்த ஊருல எந்த மயிதையும் போடறதில்லை..

(சேட்டு சிரித்தான்..அய்யா உரக்க சிரித்தான்..சேட்டு மேலும் உரக்க சிரித்தான்..அய்யா துப்பாக்கியை சேட்டின் வயிற்ருக்கு கீழே இறக்கினார்..)



(அடுத்து வரும் காட்சிகள் இரண்டும் ஒரே நேரத்தில், ஒரே ஸ்க்ரீனில் வரும். ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெளியிடப்படும்..Split Screen shots)


  இடம் 2

மேனன்: கமுதி.. அடிச்சு களையும் ஞான்.. அவுத்து விடு.. இப்டி dont  be  a coward ..

கமுதி: (சாந்தாமான குரலில்) உன் கடசீ ஆசை என்ன? இப்போவே சொல்லு..

மேனன்: வேணாம்..வுட்டுடு..

(கமுதி அருவாளால் தலையை வெட்டினான்.. தலை கீழே விழுந்தது...Screen Freeze)

இடம் 1

அய்யா: ஒண்ணு மட்டும் சொல்றேன் சேட்டு..

(சேட்டின் முகம் மாறியது, துப்பாக்கியை பார்த்த பிறகு..)

ராஜஸ்த்தான்லேந்து நீ இங்க வந்து குடுத்தனம் போட்டா தமிழ்காரன் ஆய்ட முடியுமா?

(சேட்டு இல்லை என்று மண்டையை ஆட்டினான்)

புரிஞ்சா சரி.. நான் கமுதி கடயாது..

(துப்பாக்கி சுட்டது..சேட்டு அலறினான்.. அவனுக்கு இனி எந்த பிள்ளையை பெறவும் வாய்ப்பே இல்லை..Screen Freeze)

இரண்டு இடத்திலும் காமிரா மெதுவாக சுற்றி வருகிறது.. லேசாக லேசாக அய்யாவின், கமுதியின் முகங்கள் விளங்குகின்றன..பிரீஸ் அகன்று இரண்டு முகங்களும் சிரிக்கின்றன.. திரைப்படம் துவங்குகிறது..

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ரவுத்திரம்

காட்சி 1

இடம்: உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லத்தில் உள்ள வாசல் சுவரு  
நேரம்: காலை ஒன்பது மணி நேரம்  
கதாபாத்திரங்கள்மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்  

படப்பிடிப்பில் வராத கதாபாத்திரங்கள்கட்சி தொண்டன்போலீஸ் கமிஷனர்வட்டச்செயலாளர்
அமைச்சர் அரங்கசாமிமற்ற கட்சி தொண்டர்கள் மற்றும் வேலைக்காரர்கள்   

படப்பிடிப்பில் வராத காட்சி  

ஒரு டாட்டா சுமோ வேகமாக அமைச்சரின் வீட்டு வாசலின் முன்னால் வந்து நின்றதுபட படவென காரின் கதவுகள் திறந்து மூடின.வண்டியிலிருந்து இறங்கினான் வட்டச்செயலாளர் 
.ரா.ராபக்கத்தில் இறங்கினான் பாளையங்கோட்டை சேகர்.   

.ரா.ரா. : ஏலஅய்யா கிட்ட எதுவும் ஒழுங்கா சொல்லண்ணும்இல்லாட்டி தாறு மாறு ஆக்கிபுடுவாறுஎன்ன நான் சொல்லறது ?! மறுபடியும் சொல்றேன்விஷயத்த சரியா சொல்லலேன்னா காண்டு ஆயிடுவாருஎன்ன நான் சொல்றது?!  

சேகர்நீங்க பேசறது பாளையங்கோட்டை சேகர் கிட்ட தல.... நான் ஊருக்குள்ள கால எடுத்து வெச்சா அவன் அவன் நாச்சரதுக்கு போய் ஒளிஞ்சுக்குவான்... அய்யாவ கேவலமா பேசினவன வல்ல நாட்டு மலை பக்கம் போட்டுடறேன்...   

.ரா.ரா. : அடக்கி வாசி ஏல கூறுகெட்ட மூதேவி.... (மற்றொரு கட்சி தொண்டன் வருகிறான்...அவனை பார்த்துஅப்பு....எப்படி இருக்கஎன்ன சங்கத்து பக்கமே ஆள காணோம்பிரியாணி போடலேன்னா வரமாட்டியோ?   

தொண்டன்தலைவா... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... என் பொண்டாடிக்கி போன வாரம் தான் பிரசவம் ஆச்சு...அதான் வர முடியலை...எழவுபோட்ட புள்ள பொறந்துடுச்சு...  

.ரா.ரா. : சாமி... பொட்ட புள்ளைங்கதான் இந்த காலத்துல வாழ முடியும்...ஆம்புளைங்களுக்கு இந்த காலத்துல மதிப்பே இல்லை...எல்லாம் இந்த பொட்டை கழுதைங்களுக்குதான்....சரி சரி....அய்யா இருக்காரா? 
தொண்டன்இப்போ தான் முதலமைச்சர பாத்துட்டு வந்தாரு... தலைவா உள்ள போங்க நீங்க....   

.ரா.ரா.: நல்லதா போச்சு... போய் சோலிய முடிச்சுட்டு வரேன்...  

தொண்டன்சரி தலைவா....  

வாசலில் மூன்று போலீஸ் ஜீப்புகள் வந்து நின்றனகமிஷனர் மூர்த்தி இறங்கினார்.   

அரங்கசாமி: வா வா கமிஷ்னறு... சோலி எல்லாம் எப்படி?   

மூர்த்திஏதோ தேவர் அய்யா புண்ணியத்துல போய்ட்ருக்கு... (நக்கலாக சிரித்தான் மூர்த்தி)  

அரங்கசாமி: இந்த கோயம்பத்தூர் குசும்பு இன்னும் ஒன்ன விட்டு போகலேன்னு நெனக்கறேன்... (சிரிக்கிறார்கள்)   

மூர்த்திஎன்ன விஷயம்பட்டறைல எதாவது சமாச்சாரமா?   

.ரா.ரா.: ஏல மூர்த்தி... சாமி அய்யாவ அந்த பாழா போனவன் போன அசம்பளி மீட்டிங்குல அசிங்கபடுதிட்டான்... தெரியும்னு நெனக்கறேன்...அவன போட்டு தள்ளனும்..சேகர் வந்திருக்கான்...பொட்டு வெக்கணும் சீக்கிரம்...   

மூர்த்திஅவ்வளோ தானேபெருசா ராமசாமி நாயக்கற போடற மாதிரி சொல்லுறீங்கமுடிச்சிடலாம் கவலைய விடுங்க...  

அரங்கசாமி(சிரித்துக்கொண்டே..இத பத்தி அப்புறம் பேசுவோம்... அம்மணி... நம்ம ஆளுங்களுக்கு காபி கொண்டு வா... அப்படியே ரமணா கிட்ட வண்டிய ரெடி பண்ண சொல்லு.... அஞ்சு நிமிஷத்துல கெளம்பனும்... 

படப்பிடிப்பில் வரும் காட்சி   

பிச்சைக்காரன்: கவலை வேண்டாம்... கவலை வேண்டாம்... வாழ்க்கையில் ஒன்றும் நிலையானது அல்ல... மது... மாது... எதுவும் நிலையற்றது... உயிர் மயிர் போன்றது... பணம்...பதவி.....ஹ ஹ...பதவி...கரி!   

காட்சி ஒன்று நிறைவு பெறுகிறது....    
                     
காட்சி 2 

இடம்உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லம்  
நேரம்காலை ஒன்பது மணி 
கதாபாத்திரங்கள்மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்  
படப்பிடிப்பில் வராத கதாபாத்திரங்கள்கட்சி தொண்டன்போலீஸ் இன்ஸ்பெக்டர்மந்திரி மற்றும் பலர்  

படப்பிடிப்பில் வராத காட்சி  

அரங்கசாமியின் இரங்கல் கூட்டம் அவரின் மனையில் நடந்துக்கொண்டிருக்கிறதுஅரங்கசாமி கோரமான முறையில் கொலை செய்ய பட்டார்.கொலை செய்த மர்ம நபர்/கள் யாரு என்று தெரியவில்லைமக்கள் கூட்டம் அதிகரிதுகொண்டிருக்கிறது அவரது வீட்டில்எங்கிருந்தும் அழுகை சத்தம் தான் கேட்டு கொண்டிருந்தது.   

அழுகை குரல் 1: அய்யயோ அய்யயோ.... இப்படி அநியாயம் பண்ணிட்டாங்களே... பாழா போச்சே தேவரய்ய்யா...   

அழுகை குரல் 2: இந்த காரியத்த பண்ணினவன் நாசமா போவான்...   

போலீஸ் இன்ஸ்பெக்டர்த்ரீ நாட் ஒன்... கேட் கிட்ட எல்லாரையும் கிளியர் பண்ணுங்க... கூட்டத்த சமாளீங்கய்யா... எழவு...  

கான்ச்டபுள்சரி சார்..   

தொண்டன்நேத்து தான் யா முதலமைச்சரோட நதி நீர் பிரச்சனைக்கு செரியான தீர்வு பத்தி பேசிட்டு இருந்தாரு.... இப்படி போட்டு தள்ளிடாங்களே.... முக அடையாளம் தெரியாத மாதிரி போட்டுடான்யா... ... 

மந்திரி: (பத்திரிகை காரர்களிடம் பேசிகொண்டிருக்கிறார்அரங்கசாமி தேவர் என்னுடைய நீண்ட கால நண்பர்... அவர் தமிழ் நாட்டிற்க்கு ஆற்றிய பணிகளை நாம் எல்லாரும் அறிவோம்... அவருக்கு இது போன்று ஒரு கோரமான முடிவு வந்திருக்க கூடாது தான்... இது எனக்கு ஆண்டவன் இருக்கானா இல்லையா என்ற சந்தேகத்தை வரவைக்கிறது... இதற்க்கு காரணமானவர்களை வெகு விரைவில் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுப்பேன்... இது இந்த தமிழ் மண்ணின் மீதும் என் உயிர் தமிழ் மக்கள் மீதும் ஆணை 

காட்சி இரண்டு நிறைவு பெறுகிறது....    
                     
காட்சி 3

இடம்: ஏதோ ஒரு இருட்டு அறை  
நேரம்காலை   
கதாபாத்திரங்கள்:  சுப்பிரமணியம்சீ.பீ.ஐ ஆபிசர்கள் மூவர்  
அப்போது.... 

சுப்பிரமணியம் ஒரு மிகச்சிறந்த சீ.பீ.அய் forensic அதிகாரியாக விளங்கினான்,  இது ஒரு மூன்று ஆண்டுகள் முன்புஅதற்க்கு பிறகு அவனை ஊழல் வழக்கில் தப்பாக பதிவு செய்து அவனுடைய பதவியையும் பட்டத்தையும் ரத்து செய்துவிட்டது இந்திய அரசுஅதனால் அவனுடைய வாழ்க்கை ஒரு முற்று புள்ளி ஆகிவிட்டதுஇப்போதுஅரங்கசாமி கொலை வழக்கில் சுப்புவின் திறமை வேண்டும் என்று அரசு நினைக்க,மூன்று சீ.பீ.அய் அதிகாரிகள் சுப்புவை நாடி வந்தனர்.   

இப்போது......  

சுப்பிரமணியம் ஒரு இருட்டு அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தான்அந்த அறையின் ஓரத்தில் ஒரு சிறிய விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது.சுப்பு ஒரு பீடியை பத்த வைத்தான்அப்போது டக் டக் என்று காலணிகளின் சத்தம் கேட்டதுகதவை திறந்து கொண்டு மூன்று அதிகாரிகள் அறைக்குள் புகுந்தனர்.   

அதிகாரிகுட் மார்னிங் சுப்பிரமணியம்எப்படி இருக்கீங்கபீடிய தூக்கி போடுங்க ப்ளீஸ்... எனக்கு புகை ஒத்துக்காது...   

சுப்பு: குட் மார்னிங் சீ பீ ஐ வாள்... இப்போ என்ன விஷயம்... கொல வழக்கா?   

அதிகாரிரொம்ப ஆச்சர்ய படுவீங்கன்னு நெனச்சேன்... தப்பா போச்சு... சரி விடுங்க... விசயத்துக்கு வருவோம்.... உங்களோட வரலாறு பத்தி எங்களுக்கு நல்லா தெரியும்...  

சுப்பு.. யாருக்குத்தான் தெரியாது?   

அதிகாரிப்ளீஸ்.... கவனமா கேளுங்க...   

சுப்புசொல்லுங்கோ ஒய்... ஆனா எனக்கு பீடி அடிக்கணும்...   

அதிகாரிசரி.... நேரம் அவ்வளவு எனக்கு இல்லை... உங்களுக்கு உங்க பதவிபட்டம் திரும்ப கிடைக்க இப்போ ஒரு வாய்ப்பு வந்திருக்கு... உங்க உதவி எங்களுக்கு தேவை....   

சுப்புசெவத்து கீரைய வழிச்சு கட்டடி சொரணகெட்ட பொண்டாட்டின்னு சொன்னானாம்...  

அதிகாரிஉங்க நெலமை எங்களுக்கு புரியுது... நான் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடறேன்.. நம்புங்க...   

சுப்புபலே பாண்டியா...   

அதிகாரி: உள்துறை அமைச்சர் அரங்கசாமி தேவர் முக அடையாளம் தெரியாமல் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டார்..... 

(சுப்புவின் தன் கண்களால் கூர்மையாக அதிகாரியைப்பார்தான்)  
Advanced image forensic process தேவை படுது... உங்களாலத்தான் இதை முடிக்க முடியும்... அரசாங்கத்தோட சிபெசல் ஆர்டர்... எல்லா வழக்குகளையும் உங்கமேலேர்ந்து நீக்குவோம்.... என்ன சொல்றீங்க?   

சுப்பு: (பீடியை சுண்டியபடியேசவரம் செஞ்சு வருஷகணக்காச்சு... பிளேடு வாங்க பைசா இல்லை...   
(அதிகாரிகள் சிரிக்கின்றனர்...)    

காட்சி மூன்று நிறைவு பெறுகிறது...    
           
காட்சி 4

இடம்சீ.பீ.ஐ அலுவலகம்  
நேரம்காலை  
கதாபாத்திரங்கள்பத்திரிகைக்காரர்கள்மூர்த்தி மற்றும் சுப்பிரமணியம்  

சீ.பீ.அலுவலகத்திற்கு முன்னால் பதிரிகைக்காரர்களின் கூட்டம் ஆட்டு மந்தையைப்போல் காட்சியளித்ததுசுப்புவும் போலீஸ் கமிஷனர் மூர்த்தியும் வெளியே வந்துக்கொண்டிருந்தனர்

அப்போது....  

பத்திரிகைக்காரர்: சார் சார்... ஒரு கேள்வி... ப்ளீஸ்...   

போலீஸ்ஒன் பை ஒன்... அமைதி..  

பத்திரிகைக்காரர்மிஸ்டர் சுப்பிரமணியம்உங்களால எப்படி குற்றவாளி பாளைங்கோட்டை சேகர்ன்னு கண்டுபிடிக்க முடிஞ்சுது?   

சுப்புபோலீஸ்காராள் தான் உண்மையான ஹீரோ... நான் வெறும் சயின்ஸ் வர்க்கு தான் செஞ்சேன்...   

பத்திரிகைக்காரர்: பாளைங்கோட்டை சேகர்க்கும் அரங்கசாமிக்கும் நட்பு இருந்ததாக சொல்றாங்களே...அது உண்மையாஉங்க கருத்து என்ன?   

மூர்த்திசம்பந்தமில்லாத கேள்விகள கேக்காதீங்க ப்ளீஸ்...   

(சுப்பு அப்போது மூர்த்தியை பார்த்து சிரித்தான்...)   

மூர்த்திசாரி.. எங்களுக்கு நிறைய வர்க்கு இருக்கு... அப்புறம் வாங்க ப்ளீஸ்... வழி...வழி விடுங்க ப்ளீஸ்...   

பத்திரிகைக்காரர்சார்...சார்.... லாஸ்ட் கேள்வி... ப்ளீஸ்... ப்ளீஸ்....   

மூர்த்தியும் சுப்புவும் அந்த இடத்தை விட்டு சென்றனர்.   

காட்சி நான்கு நிறைவு பெறுகிறது....     
       
காட்சி 5

இடம்உள்துறை அமைச்சர் அரங்கசாமி இல்லத்தில் உள்ள வாசல் சுவரு 
நேரம்மாலை  
கதாபாத்திரங்கள்மூன்று பிச்சைகாரர்கள் (படபிடிப்பில் வருபவர்கள்), சுப்பிரமணியம் 

அரங்கசாமியின் இல்லம் இருந்த தெரு ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்ததுசுப்பு அவனுக்கு கிடைத்த காரிலிருந்து கீழே இறங்கினான்.அரங்கசாமியின் வீட்டை பார்த்தபடியே வடிகட்டி சுருட்டை வாயில் வைத்தான்அப்போது அவனுக்கு திரைப்படத்தில் விவேக் சொன்ன வசனம் தான் ஞாபகத்துக்கு வந்தது. "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்என்று நினைத்துக்கொண்டான்வீட்டின் வாசலில் உள்ள பிச்சைகாரர்களை நோக்கி நடந்தான்  
தன் பையிலிருந்து ருபாய் நோட்டு கட்டு இரண்டை எடுத்து ஒரு பிச்சைகாரனிடம் கொடுத்தான்.   

பிச்சைகாரர்கள் அவனை வணங்கசிரித்துக்கொண்டே சுருட்டை சுண்டினான்... கார் கிளம்பியது!   

கொலை செய்தது யார்சுப்புவா? தெரியாதுசுப்புவின் ரவுத்திரத்தின் அதிரடி தான் இதெல்லாம் என்று சொன்னால் நம்புவீர்களா?   

காட்சி ஐந்து நிறைவு பெறுகிறது....  

வியாழன், 12 ஜனவரி, 2012

ஹார்வே டென்ட்டிடம் ஜோக்கர் தமிழில் பேசினால்...

ஜோக்கர் டென்ட்டின் படுக்கையை கையால் தன்பால் இழுத்தான். டென்ட் அவன் கைகளை தனக்கு கட்டப்பட்ட சங்கிலியிலிருந்து விடுவிக்க முயன்றான், முடியவில்லை. ஜோக்கர் பரிதாபமானப் பார்வையோடு...

"நம்ம ரெண்டு பேர் குள்ள எந்த விதமான மனஸ்தாபமும் வர எனக்கு ஆசையே இல்லை ஹார்வே"

லேசாக டெனட்டின் கைப்பிடி சங்கிலிகளை அகற்றினான்..

"உன்னையும் ரேச்சல்லையும் கடத்தினதுக்கப்பரம் அந்த கார்டன் என்ன அவன் கூடரதுல அடிச்சுட்டான் தம்பி.. நான் எதுமே செய்யல..புரி..", டெண்ட்டு குறுக்கிட்டான்.

"ஒன்னோட ஆளுங்க.. ஒன்னோட ஐடியா.."

ஜோக்கர் மேலும் தன் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு..

"என் மூஞ்சிய பாரு தம்பி.. இத பாத்தா எதா பிளான் பண்ணி பண்றவன் மாதிரியா தெரியுது? எனக்கு பிளான் எதுவும் கெடயாது தம்பி.. கொலைகாரங்க பிளான் பண்ணுவாங்க.. ஏன்.. போலீசு பிளான் பண்ணுவாங்க.."

எதுவும் பேசாமல் எங்கோ பார்த்தான்..பிறகு..

"நான் எப்டிபட்டவன்னு தெரியுமா ஹார்வே உனக்கு? ஹான்?", அவனது மூச்சுக்காற்று ஹார்வே மீது வீசியது..

"ஓடற கார தொரத்தறவன் நான்.. கார் கடச்சா அத வெச்சு என்ன செய்யணும்ம்னு எனக்கு தெரியாது.. ஏதோ எனக்கே தெரியாம ஏதோ பண்ணுவேன்.. அவ்ளோதான்.. ஒடம்புல வர சொறி மாதிரி.. அவ்வளவே தான்.."

ஹார்வே கூர்மையாக கவனிக்கலானான்..

"எனக்கு இந்த பிளான்..பிளான் பண்ணவே பிடிக்காது.. கருமம்.. உன் ப்ளானா இருக்கட்டும்..எவன் ப்ளானா வேணாலும் இருக்கட்டும்.. மயிருக்குகூட மதிக்கமாட்டேன்.. மரோனி ப்ளான் பண்ணுவான்.. கார்டன் ப்ளான் பண்ணுவான்.. அப்டியே ப்ளான் பண்ணி பண்ணி எல்லாத்தையும் அவனோட பிடீல்ல வெச்சுக்க ஆசை.. செல்பிஷ் பெல்லா.. சுயநலக்காரன்.. ஆனா ஒண்ணு நீ புரிஞ்சுக்கணும் தம்பி.. நான் கார்டன் கடயாது.. கார்டனோட சுயநலத்த வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரதுதான் என்னோட வேல.. எவ்ளோ பைத்தியகாரங்க அவங்கன்னு தெரிய வெக்க ட்ரை பண்ணறேன்..அவ்ளோ தான்.. so நான் இப்போ ரேச்சல்லை முடிச்சது வெறும் தொழில் தான்.. நிச்சயமா.. சுயநலம் இல்ல...புரியும்ன்னு நம்பறேன்..", மீண்டும் ஒரு பரிதாபமான சிரிப்பு..தன் கையில் இருந்த துப்பாக்கியை டென்ட்டிடம் கொடுத்தான்.. டெண்ட்டு வாங்கிக்கொண்டான், ஜோக்கேரின் தலை மேல் குறி பார்த்தான், ஆனால் சுடவில்லை.. ஜோக்கர் சிரித்தான்.. டெண்ட்டு நன்றாக குழம்பி விட்டான்..

"உன் மொகத்துல ஒரு பெரிய சிரிப்ப வரவெக்கட்டுமா தம்பி..?"

உளறல் I

என்ன கருமமான வாழ்கை சார் இது? எவனுக்கும் எதை பற்றியும் முழுதாக தெரிவதில்லை, ஆனால், நான் தான், நான் தான் என்று பெருமை பீத்திக் கொள்கிறான். வெள்ளைக்காரன் கர்த்தரை கும்பிட்டால் அது ஞாயம், அனால் யானை முகம் கொண்ட ஒரு கடவுளை கும்பிடுகிறவன் முட்டாள். முட்டாள் என்று சொல்பவன் இன்றைக்கு பெரும்பாலும் ஆங்கிலேயன் அல்ல, நம்மூர் மாக்கான் தான். எனக்கு கடவுள் பக்தி இல்லையானாலும் மற்றவனை முட்டாள் என்று கூறுபவர்கள் மீது முதலில் கோபம் வந்துகொண்டிருந்தது, இப்போது பரிதாபம் தான் வருகிறது. "ஐயோ பாவம்" என்ற ஒரு நினைப்பு. "இவனுக்கு என்ன தெரியும் என்று இவன் இப்படி பேசுகிறான்" என்ற பரிதாபமான உணர்ச்சி, ஆணவம் அல்ல.

உயர்தர காபி கடையில் காஞ்சு போன ரொட்டி தின்பவன் சமூகத்தில் நல்ல மரியாதையோடு நடத்தப்படுகிறான், அனால், சாலையோரமாக குழி தோண்டி மின் விளக்குகள் போடுபவனை பார்த்தால் எந்த பெண்ணும் "சீ..உவா..அழுக்கு" என்று நினைத்து கொண்டு அவர்களின் அழகிய முகத்தால் வெளிபடுத்துகிறார்கள். அந்த அறியாமை மூடர்களின் நிலைமையில் நின்று யோசித்தோமானால் ஞாயமாக படுமாம். பட்டாலும் படலாம், தெரியவில்லை. கேவலம். எதற்காக பிறவி எடுத்தோம், என்ன செய்ய வேண்டும் நாம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எப்போது எதை செய்ய வேண்டும் - ஒன்றும் தெரியாது எனக்கு, பெரும்பாலும் பலர்க்கு. சமூக ரீதியாக பார்த்தால் இதற்கு பதில்கள் உண்டு, அனால் என்னை உள்நோக்கியோ, என்னையும் விட மோசமான வாழ்கையை மேற்கொளிகரவரை பார்த்தாலோ, இக்கேள்விகள் சட்டென்று எழுகிறது, அனால் பதில்கள் தெரியவில்லை. படு கேவலம். இந்த மன நிலைமையை முன்னோடியாகக்கொண்டு, எனக்கு சில பல கேள்விகள் மனதில்  எழுகின்றன.  அனால் அதை நான் இப்போது செய்ய போவதில்லை. நீங்கள் எல்லாரும் கேள்விகள் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. கேட்பீர்களா? ஒரு நாள், ஒரு வாரம், இல்லை, ஒரு மாதம் முயற்சி செய்வீர்கள். அதற்கு பிறகு "அட போய்யா..இது ரொம்ப போர்", என்று நிச்சயம் சொல்லுவீர்கள். எல்லோரும் அப்படி இருக்க போவதில்லை. இருந்தாலும் தப்பில்லை, அது உங்கள் இஷ்டம். அனால், முயற்சியாவது செய்யுங்கள்.

ஏதோ ஒரு நாளிதழில் இந்த கட்டுரையை படித்தேன். மிகவும் அற்புதமாக எழுதியிருந்தார் அவர். மற்றவர் வாந்தி எடுப்பதை பார்த்து அருவெறுப்பு கொள்கிறோம். அது ஞாயமாக படலாம். சில சமயம், நாம் எதாவது சாப்பிடுகிறோம், தொண்டை குழாயை தாண்டி வயிற்ருக்குள் போவதற்கு முன்னாடியே நமக்கு வாந்தி வரும்போல தெரிகிறது. அப்போது அந்த உணவுப்பண்டம் வாயில் வந்துவிடுகிறது. அதை மீண்டும் முழுங்குவதில் எதற்கு அருவெறுப்பு? அனால் முக்கால்வாசிபேர் அப்பண்டதை கீழே துப்புகிறோம். இது போன்ற நிறைய எடுத்துக்காட்டுகளை அவர் அந்த கட்டுரையில் கூறியிருந்தார். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் எனக்கு கேள்விகள் கேட்கும் தன்மையை வளர்த்தன. உண்மையை சொல்லப்போனால், வாழ்கை இப்போது சற்று சுவரசியமாகிவிட்டது . என்ன நடந்தது என்பது நமக்கு கொஞ்சம் தெரியலாம்; என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்; என்ன நடக்கக்கூடும் என்பதைபப்  பத்தி நான் கவலை படுவதில்லை. என்ன நடக்கக்கூடும் என்பதைப் பற்றி நான் கவலைப் படுவதில்லை. தினமும் எதாவது புதுசாகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது. அப்படியே விட்டுவிடுவதில்லை. அதை பற்றி இணையதளத்தில் தேட ஆரம்பித்துவிடுகிறேன். நேரம் போவதே தெரிவதில்லை. என்ன சுகம். புதுசான மனிதர்களுடன் பழக நேர்ந்தால், அவர்களை கேள்விகள் கேட்டே தொந்தரவுப் படுத்தி விடுகிறேன். அவர்களுக்கு ஆனந்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெரியவில்லை, எனக்கு அசாத்தியமான ஆனந்தம்.

அதை விடுங்கள். இப்போது ஏதோ தமிழ் மீது அவ்வளவு பற்றும் மரியாதையும் வந்துவிட்டது. புத்தகங்களினாலும், சமூக பிரச்சனைகளினாலும், பரிச்சயதினாலும் இருந்தாலும் இருக்கலாம். தெரியாது. அனால் வந்துவிட்டது. நேரம் போவதே தெரியவில்லை. எதையோ பண்ணிக்கொண்டு இருக்கிறேன். அந்த நிமிடத்தில் செய்ய ஏதோ இருக்கிறது. வேறு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. நடுக்காட்டிர்க்குள் விட்ட மனிதன் போல ஆகிவிட்டதாக ஒரு நினைப்பு. இது நானே என்னை ஏமாற்றிக்கப் போர்த்திக்கொள்ளும் போர்வையா என்ற கேள்வி எழுவதுண்டு. அதை பற்றி இப்போதைக்கு பேச எனக்கு அருகதை கிடையாது. இந்த நொடி நன்றாக கடந்து சென்றது என்ற சந்தோஷத்தில் வாழ விரும்புகிறேன், நடைமுறையில் நடக்க முயற்சிக்கிறேன். பார்ப்போம், இது எங்கு என்னை கொண்டு செல்கிறது என்று.

அஹம் பிரம்மாஸ்மி!