திங்கள், 16 ஜனவரி, 2012

அரக்கர்கள் இரண்டு பேர்..

இடம் 1

சேட்டு: சாப், வுட்ருங்கோ என்ன.. தப்பு பண்ணிட்டேன்.. மாப் கீஜியே..

(சேட்டின் மண்டையிலிருந்து இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. அவனை சுற்றி நான்கைந்து ரௌடிகள் இருந்தார்கள். சேட்டு தரையில் முட்டி போட்டுக்கொண்டு கிடந்தார், சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த மனிதரை நோக்கி கதறிக் கொண்டிருந்தார். அய்யாவை திரையில் இப்போது பார்க்க முடியாது, அவர் முதுகு தெரியும்படியே காமிராவை வைக்கவேண்டும்)

ரௌடி: ராம்லால், இப்போ மன்னிப்பு கேட்டு இன்னா பிரயோஜனம்? அய்யாக்கிட்ட உன் புத்திய காமிச்சுட்ட பாத்தியா? ஒக்காளி உங்கள எல்லாம் ராஜஸ்த்தான் திருப்பி அனுப்பணமுடா..

(அய்யா துப்பாக்கியை ராம்லாலின் நெற்றியில் குறி பார்த்தார். ராம்லால் மேலும் கதற ஆரம்பித்தான்)

சேட்டு: எனக்கு ரண்டு பொண்ணு சாப்..வுட்ருங்கோ..

இடம் 2

மேனன் ஒரு தூணில் கட்டப்பட்டிருந்தான். உடம்பு முழுவதும் வேர்த்து ஊதிக்கொண்டிருன்தது, அவன் முகத்தில் பயம் நன்று விளங்கியது. எங்கிருந்தோ பூட்ஸ் சத்தம் கேட்டது. கண்ணிலிருந்து மேனனுக்கு நீர் வழிய ஆரம்பித்தது, ENTER கமுதி

(கமுதியின் முதுகை நோக்கித்தான் காமிரா இருக்கிறது)

கமுதி: மலையாளத்தான்.. (நக்கலாக சிரித்தான்) இன்னுமா தமிழ் பேச வராது ஒனக்கு?

மேனன்: I am a public servant..I will report to the authorities..

கமுதி: எண்டே அம்மே..எண்த்தான இத்தரை இங்கலீஷு ?

(கட்டையை எடுத்து மேனனின் காலில் ஓங்கி அடிதான்..மேனன் கதறினான்)

இடம் 1

சேட்டு: சாப், வேணாம் சாப்.. வேணாம்.. கலக்ட்டர்ட சொன்னதில்லாம் மேனன் தான்.. என்ன வுட்ருங்கோ சாப்..

ரௌடி: ஏய்.. யார்ட்ட பேசற.. இதக்கேளு..

(ரௌடி தன் தொலைபேசியை தட்டினான்.. சேட்டின் குரல் கேட்டது..)

சேட்டு: (தொலைபேசியில்) கலக்ட்டார் சாப்.. நான் நிம்பல்க்கோ அப்ரூவர் ஆரேன்.. இந்த மேனனும் அய்யசாப்பும் சேர்ந்துகிட்டு தான் டெண்டர்ல்ல ஜகடா சென்ஜ்ருக்காங்க... இருபத்தஞ்சு கோடி சாப்.. நான் வெறுமனே முத்துகிட்டே காசனுபிச்சேன்.. சாப், இந்த முத்து தான் அய்யசாபோட ரைட்டு ஹாண்டு.. வுட்ராதீங்க அவனையும்..

(ரௌடி தொலைபேசியை நிறுத்தினான்..சேட்டுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது..)

ரௌடி:  அய்யே.. ஒண்ணுக்கு புட்டான் தல இவன்.. ராஜஸ்தான்ல தண்ணியே இல்லன்னு சொல்றீங்க.. எங்க தண்ணிய குடிச்சுட்டு எங்க முன்னாடியே மூத்தரம் வேற போற நீ..

(பட் என்று புரமண்டையில் ஒரு தட்டு தட்டினான்..சேட்டு விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்)

(அய்யா ரௌடிகளைப்பார்த்து வெளியே போகுமாறு சமிக்ஞை செய்தார். எல்லோரும் வெளியேறினார்கள்)

அய்யா: இப்போ உன் கடைசி ஆசை என்ன?

 இடம் 2

மேனன்: அய்யா ஒன்ன சும்மா விடபோரதில்லை.. பட்டி..

கமுதி: ஒக்காளி.. அவன் பேர சொல்லாதே.. காசுன்னா நக்கிட்டுப்போற நாய் அது.. ஒன்னமாதிரி.. டெண்டர் எனக்கு வரத்தானே ஒனக்கு இருபத்தஞ்சு லட்சம் குடுத்தேன்.. இதுக்கு மேல நீ காச வெச்சு என்ன செய்யப்போற? ஹான்?

(மேனன் முழித்தான்.. ஏதோ ஒரு பேரபாயம் வரப்போவது அவனுக்கு நன்கு விளங்கியது..)

கமுதி: வருத்தமா இருக்கு டா.. மலையாளத்தான்.. உங்கள நம்பக்கூடதுன்னு சும்மாவா சொன்னாங்க? த்த.. புத்திய காமிச்சுட்ட பாத்தியா?!

(மேனன் மேலும் பயந்தான்.. கமுதி கட்டையை தூக்கி போட்டான்.. முதுகிலிருந்து ஒரு அருவாளை எடுத்தான்.. மேனனின் கண்கள் பிதுங்க ஆரம்பித்தது..)


இடம் 1

அய்யா: அது எப்டி உங்க வீட்டு ரொட்டிகளும் குட்டிகளும் எப்பவுமே வித்யாசமாவும் ருசியாவும் இருக்கு? பதில் சொல்லு சேட்ஜி..

(சேட்டை உயர்த்தி ஒரு நாற்காலியில் உட்க்கார வைத்தான் அய்யா)

சேட்டு: என் பொண்ணுகள ஒன்னும் செஞ்சுரதீங்கோ சாப்.. என்ன வேணா கதம் பண்ணிடுங்கோ..

(உரக்கக சிரித்தார் அய்யா)

அய்யா: பயபடாதே சேட்டு.. பொண்ணுகள விடு..இந்த சப்பாத்தி பத்தி மட்டும் சொல்லு.. என்ன போடறீங்க?

சேட்டு: எதுவும் இல்ல சாப்.. கோதுமே தான்..

அய்யா: எங்க ஊருல மட்டும் என்ன போடறாங்களாம்.. மாட்டு சாணியவா? வேற என்ன..

சேட்டு: நெய் சாப்.. நெரிய போடுவோம்..

அய்யா: அதானே பாத்தேன்.. இந்த ஊருல எந்த மயிதையும் போடறதில்லை..

(சேட்டு சிரித்தான்..அய்யா உரக்க சிரித்தான்..சேட்டு மேலும் உரக்க சிரித்தான்..அய்யா துப்பாக்கியை சேட்டின் வயிற்ருக்கு கீழே இறக்கினார்..)



(அடுத்து வரும் காட்சிகள் இரண்டும் ஒரே நேரத்தில், ஒரே ஸ்க்ரீனில் வரும். ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெளியிடப்படும்..Split Screen shots)


  இடம் 2

மேனன்: கமுதி.. அடிச்சு களையும் ஞான்.. அவுத்து விடு.. இப்டி dont  be  a coward ..

கமுதி: (சாந்தாமான குரலில்) உன் கடசீ ஆசை என்ன? இப்போவே சொல்லு..

மேனன்: வேணாம்..வுட்டுடு..

(கமுதி அருவாளால் தலையை வெட்டினான்.. தலை கீழே விழுந்தது...Screen Freeze)

இடம் 1

அய்யா: ஒண்ணு மட்டும் சொல்றேன் சேட்டு..

(சேட்டின் முகம் மாறியது, துப்பாக்கியை பார்த்த பிறகு..)

ராஜஸ்த்தான்லேந்து நீ இங்க வந்து குடுத்தனம் போட்டா தமிழ்காரன் ஆய்ட முடியுமா?

(சேட்டு இல்லை என்று மண்டையை ஆட்டினான்)

புரிஞ்சா சரி.. நான் கமுதி கடயாது..

(துப்பாக்கி சுட்டது..சேட்டு அலறினான்.. அவனுக்கு இனி எந்த பிள்ளையை பெறவும் வாய்ப்பே இல்லை..Screen Freeze)

இரண்டு இடத்திலும் காமிரா மெதுவாக சுற்றி வருகிறது.. லேசாக லேசாக அய்யாவின், கமுதியின் முகங்கள் விளங்குகின்றன..பிரீஸ் அகன்று இரண்டு முகங்களும் சிரிக்கின்றன.. திரைப்படம் துவங்குகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக